பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
323

இரவுக் குறி

    விரையென்ன மென்னிழ லென்ன
        வெறியுறு தாதிவர்போ
    துரையென்ன வோசிலம் பாநலம்
        பாவி யொளிர்வனவே.

152

14.6 உட்கொண்டுவினாதல்

   
உட்கொண்டு வினாதல் என்பது கேட்ட வினாவையுட் கொண்டு அந்நிலத்து மக்கள் கோலத்தனாய்ச் செல்வானாக, நின்னூரிடத்து இராப்பொழுது நுமர் எம்மலரைச்சூடி எச்சாந்தை யணிந்து என்ன மரநிழலின்கீழ் விளையாடுபவெனத் தலைமகன் றோழியை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

153. செம்மல ராயிரந் தூய்க்கரு
        மால்திருக் கண்ணணியும்
    மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
        தோன்மன்னு தென்மலயத்

_______________________________________________________________

மார்பையுந் தோளையுநிமிர்த்து; வட்கார் நிரை அழல் எழ அன்று எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர்-பகைவரது நிரையையழலெழும் வகை யன்றெய்து நின்றவனது தில்லையையொக்கு நின்னூரெனக்கூட்டுக.

    மெல்லிய நிலத்தையுடைய நிழலை மென்நிழலென்றாள். நலம்பாவி யொளிர்வன என்பதனை யெல்லாவற்றோடுங் கூட்டுக. அன்று நிமிர்த்தெனவும், அன்றெய்து நின்றோனெனவுமியையும், இது குறிப்பெச்சம். வன்றழ லென்பதூஉம் பாடம். இவ்வாறு வினவத் தலைமகனொன்றனை யுட்கொள்ளுமென்று கருதிக் கூறினமையால், ஆங்கொரு சூழ லென்றார். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகற்குக் குறியிட முணர்த்துந் தோழி யவனாற்றன்னை வினவுவித்தல்.

152

14.6.  தன்னை வினவத் தானவள் குறிப்பறிந்
     தென்னை நின்னாட் டியலணி யென்றது.


   
இதன் பொருள்: அம் மலர் வாள் கண் நல்லாய்-அழகிய மலர்போலுமொளியையுடையவாகிய கண்ணையுடைய நல்லாய்; செம்மலர் ஆயிரம் தூய் கருமால் திருக்கண் அணியும் - செய்ய