பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
324

New Page 1

இரவுக் குறி

    தெம்மலர் சூடிநின் றெச்சாந்
        தணிந்தென்ன நன்னிழல்வாய்
    அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
        வாய்நும ராடுவதே. 

153 

14.7 குறியிடங்கூறல்

   
குறியிடங்கூறல் என்பது உட்கொண்டு வினாவிய தலைமகனுக்கு, யாங்கள் சந்தனச்சாந்தணிந்து, சுனைக்காவிகள் சூடி, தோகைக டுயில்செய்யும் வேங்கைப் பொழிற்கண் விளையாடுவேம்; அவ்விடத்து நின்வரவறிய மயிலெழுப்புவாயாகவெனத் தோழி குறியிடங்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

154. பனைவளர் கைம்மாப் படாத்தம்
        பலத்தரன் பாதம்விண்ணோர்
    புனைவளர் சாரற்பொதியின்
        மலைப்பொலி சந்தணிந்து

____________________________________________________________

தாமரைமலர்க ளாயிரத்தைத் தூவி முன்வழிபட்டு ஒருஞான்று அவற்றுளொன்று குறைதலாற் கரியமால் அவற்றோடொக்குந் தனது திருக்கண்ணை யிடந்தணியும்; மொய்ம் மலர் ஈர்ங் கழல் அம்பலத்தோன் மன்னுதென் மலயத்து-பெரிய மலர்போலும் நெய்த்த நிறத்தையுடையவாகிய திருவடியையுடைய வம்பலத்தான்றங்குந் தென்மலயத்திடத்து; எல்லியவாய் நுமர் ஆடுவது-இராப்பொழுதின்கண் நுமர் விளையாடுவது; எம்மலர் சூடி நின்று-எம்மலரைச் சூடிநின்று; எச்சாந்து அணிந்து-எச்சாந்தையணிந்து; என்ன நல் நிழல்வாய்-என்ன நன்னிழற்கீழ்? கூறுவாயாக எ-று.

வாள்: உவமையெனினுமமையும். நுமரென்றது அவரோடொரு நிலத்தாராகிய மக்களை. திருமாலென்பதூஉம் பாடம். நிழல் அணியன் றெனினும். பன்மைபற்றி யணியென்றார். மெய்ப்பாடு: அது. பயன்: குறியிடமுணர்த்துதல்.

153

_____________________________________________________________

14.7.  இரவுக் குறியிவ ணென்று பாங்கி
     அரவக் கழலவற் கறிய வுரைத்தது.

   
இதன் பொருள்: பனை வளர் கைம் மாப் படாத்து அம்பலத்து அரன்பாதம்-பனைபோலுநெடிய கையையுடைய மாவினுரியாகிய