14
14.23 இரக்கங்கூறி வரைவு கடாதல்
இரக்கங்கூறி வரைவு கடாதல் என்பது
களவுவிரும்பி வரைவுடம்படாத தலைமகனுக்கு, நீ செல்லுநெறிக்கண் நினக்கிடை யூறுண்டாமென்னு மச்சத்தால்
அவளழுதிரங்கா நின்றாளென்று, நீ சென்றமையறிய நின்குறி காட்டுவாயெனத் தலைமகளதிரக்கங் கூறி
வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
170. பைவா யரவும் மறியும்
மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
தில்லையின் முன்னினக்காற்
____________________________________________________________
14.23. அதிர்கழலவன் அகன்றவழி
யெதிர்வதறியா திரங்கி யுரைத்தது.
இதன் பொருள்: மன்ன-மன்னனே;
இச் சிறியாள் பெருமலர்க்கண் மை வார் குவளை-நீ செல்லு நெறிக்கண் நினக்கிடையூறுண்டா மென்னு
மச்சத்தால் இச்சிறியாளுடைய பெரிய மலர்போலுங் கண்களாகிய கருமையையுடைய நெடிய குவளைகள்; நீள்முத்த
மாலைகள் விடும்-நீண்டமுத்தமாலைகளைப் புறப்பட விடா. நிற்கும், அதனான் நினக்கிடையூறின்மையை
யிவளறிய; தில்லையின் முன்னினக் கால்-நின்பதியாகிய தில்லையெல்லையிற் சென்று கிட்டினால்;
செவ்வாய் கரு வயிர்ச் சேர்த்து-நின் செவ் வாயைக் கரிய கொம்பின்கட் சேர்த்தி யூதவேண்டும்
எ-று.
பை வாய் அரவும் மறியும் மழுவும்
பயில்-படத்தையும் பெரியவாயையு முடைய அரவும் மான்மறியும் முழுவாளும் விடாது நிகழும்-மலர்க்கை
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லை-மலர்போலுங் கையையும் நெருங்கிய நெடிய சடைகளானியன்ற
முடியையுமுடைய எல்லாப்பொருட்கு முன்னாயவனது தில்லையெனக் கூட்டுக.
குறிஞ்சிநிலத்திற்குரிய
மக்கள் கோலத்தனாய் வருமாதலின், வயிர் கூறப்பட்டது. மலர்க்கணென்பது உவமை கருதாது கண்ணென்னுந்
துணையாய் நின்றது. கண்ணாகிய குவளைப் பெருமலரென்று கூட்டு வாரும், மலர்தலையுடைய கண்ணென்பாருமுளர்.
மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல்.
170
|