பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
347

New Page 1

 இரவுக் குறி

    பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
        வாய்ப்புலம் புற்றுமுற்றும்
    அன்னம் புலரு மளவுந்
        துயிலா தழுங்கினவே.

172

14.26 கடலிடை வைத்துத் துயரறிவித்தல்

   
கடலிடை வைத்துத் துயரறிவித்தல் என்பது தலைமகளிரவுறுதுயரம், தலைமகன் சிறைப்புறமாக, இவள்வாட நீ யிரையாநின்றாய்; இது நினக்கு நன்றோவெனத் தோழி கடலொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

173. சோத்துன் னடியமென் றோரைக்
        குழுமித்தொல் வானவர்சூழ்ந்
    தேத்தும் படிநிற்ப வன்தில்லை
        யன்னா ளிவள்துவள

____________________________________________________________

வாயழுங்கினவெனவியையும். நெடும்பொழுது துயின்றில வென்பாள் புலருமளவுமென்றாள். பிற்றைஞான்று பகற்குறிவந்து நிற்பக் கூறினாளெனினுமமையும். அழுங்கல் - இரக்க மெனினுமமையும். அறைப்புனல்-அறைதலை யுடைய புனல். மெய்ப்பாடு: அழுகை. பயன்:  அல்ல குறிப்பட்டமை தலைமகற் குணர்த்துதல். இனித்திணைநெய்தல்.

172

14.26.  எறிகடல் மேல்வைத் திரவரு துயரம்
      அறைக ழலவற் கறிய வுரைத்தது.


   
இதன் பொருள்: பெருங்கடலே - பெருங்கடலே; ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து - முற்காலத்து மிவ்வா றொலித்து உன்னமிர்தத்தையுந் திருவையுந் திங்களையுமிழந்து வைத்தும்; நீ பேர்த்தும் அவம் இவள் துவள இரைப்பு ஒழியாய் - பெயர்த்து மொருபயனின்றியே இவள்வாட இரையாநின்றாய்; பழி நோக்காய் - காரணமின்றிப் பிறரை வருத்துதலான் வரும்பழியையு நோக்குகின்றிலை; நினக்கிதுநன்றோ? எ-று.

   
சோத்து உன் அடியம் என்றோரை - சோத்தம் உன்னடியமென்- றொருகாற் சொன்னாரை; தொல் வானவர் குழுமிச் சூழ்ந்து ஏத்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் - பழையராகிய வானவர் குழுமிப்