பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
348

ஆர

 இரவுக் குறி

    ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
        மதியும் இழந்தவம்நீ
    பேர்த்து மிரைப்பொழி யாய்பழி
        நோக்காய் பெருங்கடலே.

173

14.27 காமமிக்க கழிபடர்கிளவி

   
காமமிக்க கழிபடர்கிளவி என்பது தலைமகனைக் காணலுற்று வருந்தாநின்ற    தலைமகள், தனது வேட்கை மிகவாற் கேளாதன வற்றைக் கேட்பனவாக விளித்து, நீங்கள் என்னை ஏதுற்றழிகின்றா யென்று ஒருகால் வினவுகின்றிலீர்; இதுவோ நுங்காதன்மை யென அவற்றொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

174. மாதுற்ற மேனி வரையுற்ற
        வில்லிதில் லைநகர்சூழ்
    போதுற்ற பூம்பொழில் காள்கழி
        காளெழிற் புள்ளினங்காள்

_______________________________________________________________

பரிவார மாய்ச் சூழ்ந்துநின் றேத்தும் வண்ணம் நிற்கு மவனது தில்லை யன்னாளாகிய இவளெனக் கூட்டுக.

    சோத்தம்-இழிந்தார் செய்யு மஞ்சலி; அது சோத்தெனக் கடைக்குறைந்து நின்றது. சோத்த மடிய மென்பதூஉம், அடியமெனிற் குழுமித் தொல்லை வானவ ரென்பதூஉம், குழீஇத்தொல்லை வானவர்சூழ்ந் தேத்தும் படிவைப்பவ னென்பதூஉம் பாடம். திருவு மதியு மென்பது செல்வமு மறிவுமென வேறு மொருபொருடோன்ற நின்ற தென்பாருமுளர். இரா குறுகி நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை.

173

14.27.  தாம மிக்க தாழ்குழ லேழை
      காம மிக்க கழிபடர் கிளவி.

   
இதன் பொருள்: மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் - மாதுபொருந்திய மேனியையுடைய வரையாகிய மிக்கவில்லை யுடையவனது தில்லைநகரைச் சூழ்ந்த; போது உற்ற பூம்பொழில்காள் -போதுபொருந்திய மலரினையுடைய பொழில்காள்;