14
இரவுக்
குறி
14.28
காப்புச் சிறைமிக்க கையறுகிளவி
காப்புச் சிறைமிக்க கையறுகிளவி
என்பது காமமிக் கெதிர்ப்பட விரும்பாநின்ற தலைமகள், இவ்விடையீடெல்லா நீந்தி ஒருவழியான்
வந்தாராயினும் இஞ்ஞாளி குரைதரா நின்றமையின் யாமிவரை யெதிர்ப்படுதலரிதெனக் காப்புச்சிறைமிக்கு
வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்-
175. இன்னற வார்பொழிற்
றில்லை
நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல்
விளக்கிருளின்
___________________________________________________________
14.28. மெய்யுறு காவலிற்
கையறு கிளவி.
இதன் பொருள்: இன் நறவு
ஆர் பொழில் தில்லைநகர் இறை சீர் விழவில்-இனிய நறவார்ந்த பொழிலையுடைய தில்லைநகர்க்கிறைவனாகிய
வனது சீரையுடைய விழவின்கண்; பல் நிறமாலைத் தொகை பகலாம்-மாணிக்க முதலாயினவற்றாற் பல நிறத்தை
யுடையவாகிய மாலைகளின் றொகைகளான் இராப்பொழுதும் பகலாகாநிற்கும்; பல் விளக்கு இருளின் துன்
அற உய்க்கும் - அதுவேயுமன்றிப் பலவாகிய விளக்கு இருளின் பொருந்துதலறத் துரக்கும்; இல்லோரும்
துயிலின் - இவ்விடையீடேயன்றி ஒருபொழுதும் துயிலாத இல்லோரு மொருகாற்றுயில்வராயின்; துறைவர்
கொன்மிக்கநிற வேலொடு வந்திடின் - துறைவர் அச்சத்தைச் செய்யு மிக்க நிறத்தையுடைய வேலோடொருகால்
வருவராயின்; ஞாளி குரை தரும்-அப்பொழுது நாய் குரையாநிற்கும்; அதனால், அவரை நாமெதிர்ப்படுத
லரிதுபோலும் எ-று.
மாலைத்தொகையும் இராப்
பகலாகாநிற்கும் பல்விளக்கும் இருளைத் துரக்குமென்றுரைப்பினுமமையும். இல்லோருந் துயிலினென்றதனான்,
அதுவுமோ ரிடையீடு கூறப்பட்டதாம். மிக்கவே லென்றியைப்பினு மமையும். மெய்யுறுகாவல் - பிழையாத
மிக்க காவல் இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. இவற்றைத் தலைமகன் கேட்பின் வரைவானாம்;
தோழி கேட்பின் வரைவுகடாவு வாளாம்; யாருங் கேட்பாரில்லையாயின் அயர் வுயிர்த்துத் தானே ஆற்றுதல்
பயன்.
175
|