பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
352

New Page 1

 இரவுக் குறி

போருறு வேல்வயப் பொங்குரும்
        அஞ்சுக மஞ்சிவருஞ்
    சூருறு சோலையின் வாய்வரற்
        பாற்றன்று தூங்கிருளே.

176

14.30 தன்னுட்கையா றெய்திடுகிளவி

   
தன்னுட்கையா றெய்திடுகிளவி என்பது தலைமகனைக் காணலுற்று வருந்தாநின்ற தலைமகள், இக்கண்டல் சான்றாகக் கொண்டு இப்புன்னையிடத்துக் கலந்த கள்வரை இவ்விடத்து வரக்கண் டிலையோ? துணையில்லாதேற்கு ஒருசொல்லருளா யென்று, தன்னுட் கையாற்றை மதியொடுகூறி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

177. விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
        தில்லைமெல் லங்கழிசூழ்
    கண்டலை யேகரி யாக்கன்னிப்
        புன்னைக் கலந்தகள்வர்

_______________________________________________________________

வுரைக்க. இப்பாடத்திற்கு ஏனைமூன்றடியும் உறையென் றோதுப. வரற்பாற்றன்றென்பது வினைமேனின்றது. நவ்விநோக்கியது கிளவி யென வியையும். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல்.

176

14.30.  மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
       தன்னுட் கையா றெய்திடு கிளவி.


   
இதன் பொருள்: கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளங்கும் மண்டலமே - கங்குல் முழுது மாகாயத்திடத்தை விளக்கு மண்டலமே; விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை - விண்ணிடத்துள்ளா ராகிய வெல்லார்க்கும் வேந்தராயுள்ளாரது வளவிய தில்லை வரைப்பின்; மெல்லங் கழி சூழ் கண்டலே கரியா - மெல்லிய கழிசூழ்ந்த கண்டலே சான்றாக; கன்னிப் புன்னைக் கலந்த கள்வர் - இளையபுன்னைக்கண் என்னைக் கலந்த கள்வர்; வரக் கண்டிலையே - ஒரு கால்வரக் கண்டிலையோ; தமியேற்கு ஒரு வாசகம் பணியாய் - துணையில்லாதேற் கொருசொல் லருளாய் எ-று.

   
மெல்லங்கழி யென்பதூஉமொரு பண்புத்தொகை முடிபு. மென்மை நிலத்தின் மென்மை. கழிசூழ்புன்னையெனக் கூட்டுக. கண்டலையென்னு மைகாரம் அசைநிலை. கரியாகக்கொண்டென