பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
353

கண

 இரவுக் குறி

    கண்டிலை யேவரக் கங்குலெல்
        லாம்மங்குல் வாய்விளக்கும்
    மண்டல மேபணி யாய்தமி
        யேற்கொரு வாசகமே.

177

14.31 நிலைகண்டுரைத்தல்

   
நிலைகண்டுரைத்தல் என்பது தலைமகள் தன்னுட்கையாற்றை மதியொடு கூறி வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன், ஆற்றாமையான் இல்வரைப்பின்கட் புகுந்து நிற்ப, தோழியெதிர்ப்பட்டு, நீயிவ்வா றில்வரைப்பின்கட் புகுந்துநின்றாற் கண்டவர் நின்னைப் பெரும்பான்மை நினையாது மற்றொன்று நினைப்பராயின் அவளுயிர்வாழ வல்லளோ? இனியிவ்வா றொழுகற்பாலை யல்லையென வரைவு தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

178. பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
        பரன்பரங் குன்றினின்ற
    புற்றொன் றரவன் புதல்வ
        னெனநீ புகுந்துநின்றால்

________________________________________________

வொரு சொல் வருவித்து இரண்டாவதாக வுரைப்பினுமமையும். எஞ்ஞான்று மனத்ததொன்றாகத் தாமொன்று மொழிந்தாரென்னுங் கருத்தாற் கள்வரென்றாள். கள்வர்க்கண்டிலையே யென்பது பாடமாயின் உருபுவிரிக்க., கங்குலெல்லாங் கண்டிலையேயென்று கூட்டியுரைப்பினுமமையும். கண்டே கூறுகின்றிலை யென்னுமுணர்வினளாகலின், எய்திடுகிளவியாயிற்று. அந்நுண்மருங்குல் கிளவியென்றியையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர்வுயிர்த்தல்.

177

14.31.  நின்னி னழிந்தனள் மின்னிடை மாதென
      வரைவுதோன்ற வுரைசெய்தது.

   
இதன் பொருள்: பற்று ஒன்று இலார் பற்றும்-துறக்கப்படுவன வற்றின்மேற் பற்றொன்றுமில்லாதவர்கள் அறிந்து பற்றும்; தில்லைப் பரன் பரங்குன்றில் நின்ற-தில்லைக்கணுளனாகிய பரனது பரங்குன்றின்கணின்ற-புற்று ஒன்று அரவன் புதல்வன் என-அப்புற்றொன்றவரவனுடைய புதல்வனாகிய முருகவேளைப்போல; நீ புகுந்து