பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
356

அலர

 இரவுக் குறி

    அலரா விருக்கும் படைகொடுத்
        தோன்தில்லை யானருள்போன்
    றலராய் விளைகின்ற தம்பல்கைம்
        மிக்கைய மெய்யருளே.

180

_____________________________________________________________

தாமரை மலராயிரத்தைக் கொண்டு சென்றிட்டு வணங்கி; ஆயிரம் கரத்தால் அலர் ஆர் கழல் வழிபாடு செய்தாற்கு-தன்னாயிரங் கையானு மலர்போலுங் கழலை வழிபடுதலைச் செய்தவற்கு; அளவில் ஒளிகள் அலராவிருக்கும் படை கொடுத்தோன்-அளவில்லாத வொளிகள் விரியாநிற்கும் ஆழியாகிய படையைக் கொடுத்தவன்; தில்லையான்-தில்லைக்கண்ணான்; அருள் போன்று-அவனதருள் போல; ஐய - ஐயனே; மெய் அருள்-நின்னுடைய மெய்யாகிய வருள்; அம்பல் கைம்மிக்கு அலராய் விளைகின்றது-அம்பல்கைம் மிக்கலராய் விளையாநின்றது; இனித்தக்கது செய்வாயாக எ-று.

    அலராவிருக்கு மென்பது ஓர் நிகழ்காலச் சொல். தில்லையானருள் பெற்றார் உலகியல்பினராய் நில்லாமையின், அவ்வருளுலகத்தார்க் கலராமென்பது கருத்து.

    “நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப”

    (தி.8 திருப்பொற்சுண்ணம் பா. 7) என்பதூஉ மக்கருத்தேபற்றி வந்தது. அம்பல்-பரவாத களவு; என்னை?” அம்பலு மலருங் களவு” (இறையனாரகப் பொருள்-22) என்றாராகலின்.

180

இரவுக்குறி முற்றிற்று.