பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
358

15

ஒருவழித் தணத்தல்

15.1 அகன்றணைவுகூறல்

   
அகன்றணைவுகூறல் என்பது அலரறிவுறுத்ததோழி, இத்தன்மையை நினைந்து நீ சிலநாளாகன்றணைவையாயின் அம்பலு மலருமடங்கி இப்பொழுதே அவளுக்குப் பழியில்லையா மெனத் தலைமகனுக்கிசைய அகன்றணைவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

181. புகழும் பழியும் பெருக்கிற்
        பெருகும் பெருகிநின்று
    நிகழும் நிகழா நிகழ்த்தினல்
        லாலிது நீநினைப்பின்
    அகழும் மதிலும் அணிதில்லை
        யோனடிப் போதுசென்னித்
    திகழு மவர்செல்லல் போலில்லை
        யாம்பழி சின்மொழிக்கே.

181

______________________________________________________________

15.1.  வழிவேறு படமன்னும்
     பழிவேறு படுமென்றது.


   
இதன் பொருள்: புகழும் பழியும் - காரணவசத்தாற்பிறந்த புகழும் பழியும்; பெருக்கின் பெருகும் - அக்காரணங்களை மிகச் செய்தொருவன் வளர்க்குமாயிற் றாம்வளரும்; நிகழ்த்தின் - அக்காரணங்களை யிடையறாமற்செய்து நிகழ்த்துவனாயின்; பெருகிநின்று நிகழும் - அவ்வாறு வளர்ந்து நின்று மாயாதுளவாய்ச் செல்லும்; அல்லால் நிகழா - இவ்வாறல்லது அவைதாமாக நிகழா; அதனான், இது நீ நினைப்பின் - இப்பெற்றியை நீ கருதுவை யாயின்; அகழும் மதிலும் அணி தில்லையோன் அடிப்போது-அகழையு மதிலையுமணிந்த தில்லைக்கண்ணானுடைய அடியாகிய போதுகள்; சென்னித் திகழுமவர் செல்லல் போல் - தஞ்சென்னிக்கண் விளங்கும் பெரியோரது பிறவித்துன்பம்போல; சில்மொழிக்குப் பழி இல்லையாம்-இச்சின்மொழிக்குப்பழி யிப்பொழுதே யில்லையாம்; நீ நினையாமையிற் பழியாகாநின்றது எ-று.

   
நிகழுநிகழா நிகழ்த்தி னல்லாலென்புழி நிரனிறையாகக் கூட்டப்பட்டது. அகழுமதிலு மலங்காரநீர்மையவென்பது போதர, அணிதில்லை யென்றார். அகழுமதிலுமழகுசெய்தவென எழுவா