15
ஒருவழித் தணத்தல்
15.3 கடலொடுபுலத்தல்
கடலொடு
புலத்தல் என்பது கடலொடு வரவுகேட்ட தலைமகள், அது தனக்கு வாய்திறவாமையின் என்வளை கொண்டு
போனார் திறம் யான்கேட்க நீ கூறாதொழிகின்ற தென்னெனப்பின்னும் அக்கடலொடு புலந்து கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
183. பாணிகர் வண்டினம் பாடப்பைம்
பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர்
வாளர வன்புலி
யூர்சுற்றும் போர்க்கடலே.
183
______________________________________________________________
மீன்பரப்பி
(தி.8 கோவை பா.130) யென்பதற்குரைத்ததுரைக்க. திகழ்ந்தென்றதனான் ஒளிமிகுதிவிளங்கும்.
போதருமென்பது போருமென இடைக்குறைந்து நின்றது. ஈண்டு ஏனையுவம முண்மையின், உள்ளுறையுவமமின்மையறிக.
182
15.3. செறிவளைச் சின்மொழி
எறிகடற்
கியம்பியது.
இதன்
பொருள் :
பூண் நிகர்
வாள் அரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே - பூணையொக்குமொளியையுடைய அரவை யணிந்தவனது புலியூரைச்சூழ்ந்த
கரைபொருதலையுடைய கடலே; பாண் நிகர் வண்டு இனம் பாட - பாணரையொக்கும் வண்டினங்கள் சென்று
பாட; பைம்பொன் தரு வெண் கிழி - தாதாகிய பசும் பொன்னைப்புலப்படுத்தாநின்ற போதாகிய வெண்கிழியை;
தம் சேண் நிகர்காவின் வழங்கும் புன்னைத் துறைச் சேர்ப்பர் - தமது சேய்மைக்கண் விளங்குங்
காவினின்று அவற்றிற்குக் கொடுக்கும் புன்னைகளையுடைய துறையையணைந்த சேர்ப்பையுடையராகிய; திங்கள்
வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் - திங்களினொளிபோலு மொளியையுடைய என்வெள்வளையைத்
தம்மொடு கொண்டுபோனவரது திறத்தை; வாய்திறவாய் - எமக்குக் கூறுகின்றிலை? நீ கூறாதொழிகின்றதென்!
எ-று,
|