15
ஒருவழித் தணத்தல்
15.4 அன்னமோடாய்தல்
அன்னமோடாய்தல்
என்பது கடலொடுபுலந்து கூறிய தலைமகள், புன்னையொடுபுலந்து, அகன்றவர் அகன்றே யொழிவரோ? யானறிகின்றிலேன்;
நீயாயினுஞ் சொல்லுவாயாக வென அன்னமோடாய்ந்து வரவுகேளாநிற்றல். அதற்குச் செய்யுள்-
184. பகன்தா மரைக்கண் கெடக்கடந்
தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
லோநம் மகன்றுறையே.
184
_______________________________________________
கிழிதமென்று கிழிக்குப்பெயராக
வுரைப்பாருமுளர். வாய் திறவா யென்பதற்குக் கூறுவாயாகவென் றுரைப்பினுமமையும்.
183
15.4. மின்னிடை மடந்தை
யன்னமோ
டாய்ந்தது.
இதன்
பொருள்: பகன்
தாமரைக் கண் கெட - பகன் என்னும் பெயரையுடைய ஆதித்தனது தாமரைபோலுங் கண்கெட; கடந்தோன்
புலியூர்ப் பழனத்து அகன் தாமரை அன்னமே - அவனை வென்றவனது புலியூரைச்சூழ்ந்த பழனத்தின் கணுண்டாகிய
அகன்ற தாமரைக்கண்வாழும் அன்னமே; வண்டு நீல மணி அணிந்து - வண்டாகிய நீலமணியை யணிந்து; செம்பொன்
முத்து அணி - தாதாகிய செம்பொன்னையும் அரும்பாகிய முத்தையுமணிந்த; முகன் தாழ் குழைப் புன்னை
- முகத்துத் தாழ்ந்த குழையையுடைய புன்னை; இன்னும் உரையாது-இந்நிலைமைக்கண்ணு மொன்றுசொல்லுகின்ற
தில்லை; அகன்றார் நம் அகன்துறை அகன்றே யொழிவர் கொல்லோ-அகன்றவர் நமதகன்றதுறையை யகன்றே
விடுவாரோ? அறியேன்; நீயுரை எ-று.
முகன்றாழ் குழையென்பது
இருபொருட்படநின்றது. யானித் தன்மை யேனாகவும் மணியணிந்தின்புற்று நிற்கின்ற புன்னை
|