15
ஒருவழித் தணத்தல்
15.5 தேர்வழி நோக்கிக்
கடலொடு கூறல்
தேர்வழி நோக்கிக்
கடலொடு கூறல் என்பது அன்னமொடு வரவுகேட்ட தலைமகள், அதுவும் வாய்திறவாமையின், இனியவர்
வருகின்றாரல்லர்; எம்முயிர்க்குப் பற்றுக்கோடினியிதுவே; இதனை நீ யழியாதொழிவாயென அவன்சென்ற
தேர்வழி நோக்கிக் கடலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
185. உள்ளு முருகி யுரோமஞ்
சிலிர்ப்ப
வுடையவனாட்
கொள்ளு மவரிலொர்
கூட்டந்தந்
தான்குனிக்
கும்புலியூர்
விள்ளும் பரிசுசென்
றார்வியன்
தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
ஆர்க்கும்
பொருகடலே.
185
_____________________________________________________________
எனக்கொன்று
சொல்லுமோ? அன்னமே, எனக்கு நீ கூறென்பது கருத்து. ஈண்டு நம்மோடு தாம்விளையாடும் விளையாட்டை
மறந்தேவிடுவாரோ வென்னுங்கருத்தான், நம்மகன்றுறையை யகன்றேயொழிவர் கொல்லோ வென்றாள்.
184
15.5. மீன்றோய் துறைவர்
மீளு மளவு
மான்றேர் வழியை யழியே
லென்றது.
இதன்
பொருள்;
புள்ளும் திரையும் பொரச் சங்கம் ஆர்க்கும் பொருகடலே - புள்ளுந்திரையுந் தம்முட்பொரச் சங்கொலிக்குங்
கரை பொருங்கடலே; உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப - உள்ளுமுருகி மெய்ம்மயிர் சிலி்ர்ப்ப;
உடையவன் ஆட்கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் - உடையவனாகிய தானாட்கொள்ளு
மடியாருள் எமக்கோர் கூட்டத்தைத் தந்தவன் நின்று கூத்தாடும்; புலியூர் விள்ளும் பரிசு சென்றார்
வியன் தேர் வழி - புலியூரை நீங்கும்வண்ணஞ் சென்றவரது பெரிய தேர்போன வழியை; தூரல் கண்டாய்
- நின்றிரைகளாற் றூராதொழியவேண்டும்; எம்முயிர்க்குப் பற்றுக்கோடினியிதுவே எ-று.
உள்ளுமென்ற
வும்மையாற் புறத்துக்கண்ணீர் தழுவப்பட்டது. ஆட்கொள்ளுமவர் பெருமை தோன்ற உடையவனென அவன்
|