பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
366

தக

ஒருவழித் தணத்தல்

    தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
        சேக்கைகள் நோக்கினவால்
    அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
        மீனுண்ட அன்னங்களே.

188

15.9 பறவையொடு வருந்தல்

   
பறவையொடு வருந்தல் என்பது பொழுதுகண்டு மயங்கா நின்ற தலைமகள், இந்நிலைமைக்கண்ணும் என்னுண்ணோயறியாது கண்ணோட்டமின்றித் தம் வயிறோம்பாநின்றன; இஃதென்னை பாவமென வண்டானப் பறவையொடு வருந்திக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

189. பொன்னும் மணியும் பவளமும்
        போன்று பொலிந்திலங்கி
    மின்னுஞ் சடையோன் புலியூர்
        விரவா தவரினுள்நோய்

______________________________________________________________

 

சேயராயிருந்தார்; அகல் ஓங்கு இருங் கழிவாய் கொழுமீன் உண்ட அன்னங்கள் சேக்கைகள் நோக்கின - அதுவேயுமன்றி இவ்வகலோங்கிருங்- கழியிடத்துக் கொழுமீனை யுண்ட வன்னங்கடாமும் இவ்விடத்தைவிட்டுத் தஞ்சேக்கைகளை நோக்கின; இனியென் செய்வேன்! எ-று.

    பற்று அற்றவர்க்குப் புகலோன் - புலன்களிற் பற்றற்றவர்க்குப் புகலிடமாயுள்ளான்; புகுநர்க்குப் போக்கு அரியோன் - தன்கட் புகுவார்க்குப் பின் போதரவரியவன்; எவரும் புகலத் தகலோன் - எல்லாருமேத்தத் தகுதலையுடையவன்; பயில் தில்லைப் பைம் பொழிற் சேக்கைகள்-அவன் பயிலுந் தில்லை வரைப்பிற் பைம் பொழில்களி னுளவாகிய சேக்கைகளெனக் கூட்டுக.

    ஓங்குதல் - ஓதமேறி நீருயர்தல். கொழுமீன் என்பது ஓர் சாதி.

188

15.9.  செறிபிணி கைம்மிகச் சிற்றிடைப் பேதை
      பறவைமேல் வைத்துப் பையுளெய் தியது.


   
இதன் பொருள்: இருங் கழிவாய் பகலே மகிழ்ந்து இரை தேரும்