இன
ஒருவழித் தணத்தல்
இன்னு மறிகில வாலென்னை
பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
தேரும்வண் டானங்களே.
189
_______________________________________________________________
வண்டானங்கள் - என்னாற்றமைக்குப்
பரிகாரமாவதி யாதுஞ் சிந்தியாது இருங்கழியிடத்துப் பகலேபுகுந்து விரும்பித் தமக்குணவு தேடும் வண்டானங்களாகிய
குருகுகள்; உள் நோய் இன்னும் அறிகில-என்னுண்ணோயை யிந்நிலைமைக்கண்ணு மறிகின்றனவில்லை; என்னை
பாவம்-இஃதென்னை பாவம்! எ-று.
பொன்னும் மணியும் பவளமும் போன்று
பொலிந்து இலங்கி மின்னும் - பொன்போலப் பொலிந்து மாணிக்கம்போல விட்டு விளங்கிப்
பவளம்போலமின்னும்; சடையோன் புலியூர் விரவாதவரின் (உறும்) உள்நோய்-சடையையுடையவனது புலியூரைக்
கலவாதாரைப்போல யானுறுமுண்ணோ யெனக்கூட்டுக.
உறுமென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது.
முன்னறிந்தனவில்லை யாயினும் இனியறியவேண்டுமென்பது கருத்து. புலியூரை விரவாதார் கண்ணோட்டமிலராகலிற்
புலியூரை விரவாத வரினின்னுமறிகில வென்றியைத் துரைப்பினு மமையும். நிரனிறையாகக் கொள்ளாது
எல்லா மெல்லாவற்றின்மேலு மேறவுரைப்பினுமமையும். மன்னும்: அசைநிலை.
189
|