பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
372

ஒருவழித் தணத்தல்

    விளரும் விழுமெழும் விம்மும்
        மெலியும்வெண் மாமதிநின்
    றொளிருஞ் சடைமுடி யோன்புலி
        யூரன்ன வொண்ணுதலே.

193

____________________________________________________________

வருத்தத்திற்கிடமாய் நிலைதளரும் பெரியவரைகளை யுடைய தண்சிலம்பையுடையாய்; வெண் மா மதி நின்று ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள் நுதல் - வெள்ளிய பெரிய மதி நின்று விளங்குஞ் சடையானியன்ற முடியையுடையவனது புலியூரையொக்குமொண்ணுதல்; தனது அங்கம் எங்கும் விளரும் - தன் மேனிமுழுதும் பசக்கும்; விழும்-அமளிக்கண் விழாநிற்கும்; எழும் - எழாநிற்கும்; விம்மும்-பொருமா நிற்கும்; மெலியும்-நின்வன்கண்மையை நினைந்து மெலியாநிற்கும்; அதனாலின்ன நிலைமையளென்றென்னாற் சொல்லப்படாது எ-று.

    வளருமிளங்கறி கண்ணிற்கினிதாயிருத்தலின் இது நமக்குத் துய்க்கப்படாதென்றுணராத இளமந்தி அதனைத்தின்று வருந்துமாறு போலக் கண்ணுமனமுமகிழு முருவினையாகிய நின்னை நின்பெருமையுணரா தெதி்ர்ப்பட்டு வருந்தாநின்றாளென உள்ளுறை காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை.

   
இவ்வாறு ஒருவழித்தணந்து வந்து வரைவுமாட்சிமைப் படவும் பெறும். அன்றியும் உடன்போக்கு நிகழப்படும்.

193