பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
374

பத

உடன் போக்கு

    பதிபரி சுரைத்தல் பாங்கியைக் கிட்டி
    மதிநுத லாளை வளர்த்தவள் கேட்ட
    லறத்தொடு நிற்ற லதுகேட் டழுங்க
    றிறப்பா டுன்னிச் செவிலிகவன் றுரைத்த
    லடிநினைந் திரங்க லதுதாய்க் குரைத்தன்
    மடவரல் போக வாடி யுரைத்தல்
    கிளிமொழிக் கிரங்கல் கிளர்சுடர்ப் பராய்த
    லளிபெறு பருவத்திற் கவள்கவன் றுரைத்த
    னாடத் துணித னற்றாய் நயந்தவர்
    கூடக் கரையெனக் கொடிக்குறி பார்த்தல்
    சோதிடங் கேட்டல் சுவடுகண் டறித
    லேதமுற் றவைகண் டிரங்கி யுரைத்தல்
    வேட்ட மாதரைக் கண்டு வினாவல்
    புறவொடு புலத்தல் குரவொடு வருந்த
    றிறலருந் தவத்தொடு செல்லா நின்ற
    மாவிர தியரை வழியிடை வினாவல்
    வேதியர் தம்மை விரும்பி வினாவல்
    புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவன்
    மணந்தரு குழலாண் மன்னிய நிலையொடு
    வேங்கை பட்டது கண்டு வியத்த
    லாங்கவ ரியைபணி யவட்கெடுத் துரைத்தன்

    மீள வுரைத்தன் மீளா தவளுக்

    கூழ்முறை யிதுவென வுலகியல் புரைத்த

    லழுங்குதாய்க் குரைத்த லைம்பதொ டாறு
முழுங்கொலை வேலோ னுடன்போக் காகும்.

____________________________________________________________

யாடல், நகரணிமைகூறல், நகர்காட்டல், பதிபரிசுரைத்தல், செவிலி தேடல், அறத்தொடுநிற்றல், கற்புநிலைக்கிரங்கல், கவன்றுரைத்தல், அடி நினைந்திரங்கல், நற்றாய்க்குரைத்தல், நற்றாய்வருந்தல், கிளிமொழிக்கிரங்கல், சுடரோடிரத்தல், பருவநினைந்து கவறல், நாடத்துணிதல், கொடிக்குறி பார்த்தல், சோதிடங்கேட்டல், சுவடு கண்டறிதல், சுவடுகண்டிரங்கல், வேட்ட மாதரைக்கேட்டல், புறவொடுபுலத்தல், குரவொடு வருந்தல், விரதியரைவினாவல், வேதியரைவினாவல், புணர்ந்துடன்வருவோரைப் பொருந்தி வினாவல், வியந்துரைத்தல், இயைபெடுத்துரைத்தல், மீளவுரைத்தல், உலகியல்புரைத்தல், அழுங்குதாய்க்குரைத்தல் என விவை ஐம்பத்தாறும் உடன்போக்காம் எ-று. அவற்றுள்-