16
உடன்
போக்கு
16.1
பருவங்கூறல்
பருவங்கூறல் என்பது அலரறிவுறுத்த தோழி,
இவண் முலை முதி்ர்வு கண்டமையான் மகட்பேசுவார்க்கு எமர் மாறாது கொடுக்கவுங் கூடும்; அது படாமனிற்பநீ
முற்பட்டு வரைவாயாக வெனத் தலைமகனுக்குத் தலைமகளது பருவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
194. ஒராக மிரண்டெழி லாயொளிர்
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.
194
_____________________________________________________________
16.1. உருவது கண்டவள்
அருமை யுரைத்தது.
இதன் பொருள்: ஒரு
ஆகம் இரண்டு எழில் ஆய் ஒளி்ர்வோன் தில்லை ஒள் நுதல்-ஒருமேனி பெண்ணழகு மாணழகுமாகிய விரண்டழகாய்
விளங்குமவனது தில்லைக் கணுளளாகிய வொண்ணுதலுடைய; அங்கராகம் பயின்று-பூசப் படுவன பயின்று; அமிழ்தம்
பொதிந்து-அமிர்தத்தைப் பொதிந்து; ஈர்ஞ்
சுணங்கு
ஆடகத்தின் பராகம்சிதர்ந்த பயோதரம்-நெய்த்த சுணங்காகிய செம்பொன்னின் பொடியைச் சிதறின
முலைகள்; இப்பரிசே பணைத்த இராகம் கண்டால்-இப்படியே பெருத்த கதிர்ப்பைக்கண்டால்;
வள்ளலே-வள்ளலே; எமர் எண்ணுவது இல்லையே-இவண் மாட்டெமர் நினைப்பதில்லையே? Êசிலவுளவாம்
எ-று.
இராகம் வடமொழிச்சிதைவு;
ஈண்டு நிறமென்னும் பொருட்டு. இராகம் முடுகுதலென்பாருமுளர். தில்லையொண்ணுத லிராகனெ வியையும்:
மெய்ப்பாடும் பயனும் அவை.
194
|