16
உடன்
போக்கு
16.3 பொன்னணிவுரைத்தல்
பொன்னணி
வுரைத்தல் என்பது படைத்து மொழியான் மகட்பேசல் கூறின தோழி, அறுதியாக முன்றிற்கணின்று முரசொடு
பணில முழங்கப் காப்பணிந்து பொன்னணியப் புகுதா நின்றார்; இனி நின்கருத்தென்னோவெனத்
தலைமகனுக்கு அயலவர் பொன்னணி வுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-
196. பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
தழங்கும் மணமுரசே.
196
____________________________________________________________
16.3. பலபரி சினாலும் மலர்நெடுங் கண்ணியை
நன்னுதற்
பாங்கி பொன்னணிவ ரென்றது.
இதன் பொருள்: கமழ்
பூந் துறைவ - கமழ்பூந் துறைவனே; பாப்பணியோன் தில்லைப் பல் பூ மருவு சில் ஓதியை -
பாம்பாகிய வணியையுடையவனது தில்லைக்கணுளளாகிய பலவாகிய பூக்கள் பொருந்திய நுண்ணிய வோதியையுடையாளை;
நல் காப்பு அணிந்தார் - நல்ல காப்பை யணிந்தார்கள்; இனி பொன் அணிவார் - இனிப் பொன்னையணிவார்;
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று - கலியாணத்துக்குப் பொருந்திய கோப்புக்களை
யணிந்த வானைத்தோயுங் கொடிகளையுடைய முன்றிற்கணின்று; மணமுரசு இவை ஏர் குழுமி மாப்பணிலங்கள்
முழங்கத் தழங்கும் - மணமுரசங்களிவை ஏரொடு குழுமிப் பெரியசங்கங்கள் முழங்கத்தாமொலியாநின்றன;
இனியடுப்பது செய்வாயாக எ-று.
தில்லைப்
பல்பூவென் றியைப்பினு மமையும். காப்பென்றது காவலை. அணிவாரென்றது முற்றுச்சொல். கோப்பணி
முன்றிலென வியையும். மெய்ப்பாடும் பயனும் அவை.
196
|