பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
378

16

உடன் போக்கு

16.4 அருவிலையுரைத்தல்
      அருவிலை யுரைத்தல் என்பது பொன்னணி வுரைப்பக் கேட்ட தலைமகன் யான் வரைவொடு வருதற்கு நீ முலைப்பரிசங் கூறுவாயாகவென, எல்லாவுலகமு நல்கினும் எமர் அவளுடைய சிறிய விடைக்கு விலையாகச் செப்பலொட்டார்; இனிப் பெரிய முலைக்கு நீ விலைகூறுவ தென்னோவெனத் தோழி விலையருமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

197. எலும்பா லணியிறை யம்பலத்
        தோனெல்லை செல்குறுவோர்
    நலம்பா வியமுற்றும் நல்கினுங்
        கல்வரை நாடரம்ம
    சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
        கேவிலை செப்பலொட்டார்
    கலம்பா வியமுலை யின்விலை
        யென்நீ கருதுவதே.

197

___________________________________________________________

16.4.  பேதைய ரறிவு பேதைமை யுடைத்தென
ஆதரத் தோழி அருவிலை யுரைத்தது.


   
இதன் பொருள்: 
சிலம்பா-சிலம்பா; எலும்பால் அணி இறை-எலும்புகளானலங்கரிக்கு மிறைவன்; அம்பலத்தோன்-அம்பலத்தின் கண்ணான்; எல்லை செல்குறுவோர் நலம் பாவிய முற்றும் நல்கினும்- அவனதெல்லைக்கட் செல்லக் கருதுவாரது நன்மைபரந்த வுலகமுழுதையும் நீ கொடுப்பினும்; கல் வரை நாடர்-எம்முடைய தமராகிய கல்வரைநாடர்; வடிக்கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார்-வடுவகிர்போலுங் கண்ணையுடையாளது சிறியவிடைக்கே விலையாகச் சொல்லுத லியையார்; கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவது-கலம்பரந்த முலையின் விலையாகயாதனை நீ கருதுவது? ஒன்றற்கும் அவருடம்படார் எ-று.

   
எலும்பாற்செய்த வணியென்று ஒருசொல் வருவித் துரைப்பாருமுளர். எல்லை சேறல் அறிவா லவனை யணுகுதல்.  தில்லையெல்லை யெனினுமமையும். அவர் நலம்பாவா விடமின்மையின் எஞ்சாமை முழுதுமென்பார், நலம்பாவியமுற்று மென்றார்; என்றது அவர் சீவன்முத்தராயிருத்தல். அஃதாவது சீவனுடனிருக்கும்போதே