பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
379

16

உடன் போக்கு

16.5 அருமைகேட்டழிதல்

   
அருமை கேட்டழிதல் என்பது அருவிலைகேட்ட தலைமகன், நீயவளதருமை கருதாது அவளதவயங்களிலுண்டாகிய நயத்தைப் பற்றிவிடாது நடுங்காநின்றாய்; இனி மதியைப்பிடித்துத் தரவேண்டியழும் அறியாக் குழவியைப்போலக் கிடந்தரற்றுவாயாக வெனத் தன்னெஞ்சோடழிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

198. விசும்புற்ற திங்கட் கழும்மழப்
        போன்றினி விம்மிவிம்மி

    அசும்புற்ற கண்ணோ டலறாய்

        கிடந்தரன் தில்லையன்னாள்

______________________________________________________________

முத்தியையடைந் திருத்தல். முத்தியாவது எங்குமொக்க வியாத்தியை யடைந்திருத்தல். இஃது அகண்டபரிபூரண ரென்றபடி, அம்மகேளென்னுங் குறிப்பின்கண்வந்தது. சிற்றிடைக்கே யென்னுமேகாரம்: பிரிநிலை. இவனுயர்ந்த தலைமகனாதலால், தன்றமரைக் கல்வரைநாடரென்றும், பேதையரென்றும் கூறினாள். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளதருமையுணர்த்தல்.

16.5.  பெருமைநாட் டத்தவள்
அருமைகேட் டழிந்தது.

   
இதன் பொருள்:
 அரன் தில்லை அன்னாள் குயம் - அரனது தில்லையை யொப்பாளுடையமுலை; புற்று அரவு இடை - புற்றின் கண்வாழும் பாம்புபோலுமிடை; கூர் எயிற்று ஊறல் - கூரிய வெயிற்றின் கணூறியநீர்; குழல் மொழியின் நயம் பற்றி - குழலோசை போலுமொழி என விவற்றின்கட்கிடந்த இன்பத்தையே கருதி; நின்று நடுங்கித் தளர்கின்ற நல் நெஞ்சமே-விடாது நின்று அவளதருமை கருதாயாய் நடுங்கி வருந்தாநின்ற நல்ல நெஞ்சமே; விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழப்போன்று - விசும்பைப் பொருந்திய திங்களைத் தரவேண்டி யழுங் குழவியையொத்து; அசும்பு உற்ற கண்ணோடு விம்மி விம்மி இனிக் கிடந்து அலறாய்-நீரறாமையைப் பொருந்திய   கண்ணை யுடையையாய்ப் பொருமிப் பொருமி இனிக்கிடந்தலறுவாயாக எ-று.