பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
381

New Page 1

உடன் போக்கு

    பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
        லாரையெல் லாம்புல்லினாள்
    பைதயங் கும்மர வம்புரை
        யும்மல்குற் பைந்தொடியே.

199

16.7 குறிப்புரைத்தல்

   
குறிப்புரைத்தல் என்பது வருத்தங்கூறிப் போக்குணர்த்தி அதுவழியாக நின்று, என்னைப் புல்லிக்கொண்டு தன்னுடைய பூவையையும் பந்தையும், பாவையையுங் கிளியையும் இன்றென்கைத் தந்தாள்; அது நின்னோடுடன் போதலைக் கருதிப்போலுமெனத் தோழி தலைமகனுக்குத் தலைமகளது குறிப்புரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

200. மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
        பங்கர்வண் தில்லைமல்லற்
    கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
        கண்ணி குறிப்பறியேன்

_________________________________________________

கண்ணீர்கொண்டென்றது பெண்களுக் கியல்பான குணமொன்று, நெடுங்காலங் கூடமருவினாரை விட்டு நீங்குகின்ற துயரத்தாற் றோன்றிய தொன்று, இக்காலமெல்லாம் உங்களைச் சேர்ந்து போந்த பெருநலத்தான் இப்பெருநலம் பெற்றேனென்னு முவகைக் கண்ணீரொன்று, இப்பெருநல மென்றது உடன்போக்கை. ஆதலான், நல்லாரையெல்லாம் புல்லிக்கொண்டு கண்ணீர் கொண்டாள். பொய்போலு மசையு மருங்கு லெனினுமமையும். குறித்துரைத்தது-கொண்டு நீங்கென்பது பயப்பவுரைத்தது.

199

16.7.  நறைக் குழலி
     குறிப் புரைத்தது.

   
இதன் பொருள்: என் பைந்தொடி - என்னுடைய பைந்தொடி; இன்று என்னைப் புல்லிக்கொண்டு பூவை தந்தாள்-இன்றென்னைப் புல்லிக்கொண்டு தன் பூவையை யென்கையிற் றந்தாள்; பொன் பந்து தந்தாள்-பின் பொற்றகட்டாற் புனைந்த பந்தைத் தந்தாள்; பாவை தந்தாள்-பின் றன் பாவையைத் தந்தாள்; பைங்கிளி அளித்தாள்-பைங்கிளியையுமளித்தாள்; மாவை வந்து ஆண்ட மெல் நோக்கிதன் பங்கர் - மானைச் சென்றடிமைக்கொண்ட மெல்லிய நோக்கை