பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
382

பூ

உடன் போக்கு

    பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
        தாளென்னைப் புல்லிக்கொண்டு
    பாவைதந் தாள்பைங் கிளியளித்
        தாளின்றென் பைந்தொடியே.

200 

16.8 அருமையுரைத்தல்

   
அருமையுரைத்தல் என்பது குறிப்புரைத்துப் போக்குடம் படுத்திய தோழிக்கு, கொங்கைபொறாது நடுங்காநின்ற இடையினை யுடையாளது மெல்லியவடிக்கு யான்செல்லும் வெஞ்சுரந்தகாது; அதன்மேலும் எம்பதியுஞ் சேய்த்து; அதனால் நீ கருதுகின்ற காரியமிகவுமருமையுடைத்தெனத் தலைமகன் போக்கருமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

201. மெல்லியல் கொங்கை பெரியமின்
        நேரிடை மெல்லடிபூக்
    கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
        தீக்கற்று வானமெல்லாஞ்

_____________________________________________________________

யுடையாளது கூற்றையுடையவரது; வண்தில்லை மல்லல் கோவை வந்து ஆண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பு அறியேன் - வளவியதில்லை வரைப்பினுண்டாகிய வளத்தையுடைய கொவ்வைக் கனியைச் சென்றாண்ட செவ்வாயையுடைய இக்கருங்கண்ணியது கருத்தறிகின்றிலேன்; நின்னுடன் செல்லப்போலும் எ-று.

    புல்லிக்கொண்டு பாவையைத் தந்தாளென்றியைத்து; பாவை மேலுள்ளவன்பால் அதனைத் தருவுழிப் புல்லிக்கொண்டு தந்தாளென் றுரைப்பாருமுளர். இவையிரண்டற்கு மெய்ப்பாடு: பெருமிதம் பயன்: உடன்போக்குணர்த்துதல்.

200

16.8.  கானின் கடுமையும் மானின் மென்மையும்
     பதியின் சேட்சியும் இதுவென வுரைத்தது.


   
இதன் பொருள்: வானம் எல்லாம் கற்றுச் சொல்லிய சீர் - வானுல கெங்கும் ஆண்டையராற் கற்றுச்சொல்லப்பட்ட புகழையும்; சுடர் திங்கள் கண்ணித் தொல்லோன் புலியூர் - சுடரை உடைய திங்களாகிய கண்ணியையுமுடைய பழையோனது புலியூரில்; அல்லி