New Page 1
உடன்
போக்கு
சொல்லிய சீர்ச்சுடர்ந்த
திங்களங்
கண்ணித்தொல்
லோன்புலியூர்
அல்லியங் கோகைநல் லாயெல்லை
சேய்த்தெம் அகல்நகரே.
201
16.9 ஆதரங்கூறல்
ஆதரங்கூறல் என்பது போக்கருமை கூறிய
தலைமகனுக்கு, நின்னோடு போகப்பெறின் அவளுக்கு வெஞ்சுரமும் தண்சுரமாம்; நீ யருமைகூறாது அவளைக்
கொண்டு போவெனத் தோழி தலைமகள தாதரங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
202. பிணையுங் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
____________________________________________________________
அம் கோதை நல்லாய்-அல்லியங்கோதையையுடைய
நல்லாய்; மெல்லியல் கொங்கை பெரிய-மெல்லியலுடைய கொங்கைகள் பெரிய; இடை மின் நேர்-அவற்றைத்
தாங்கு மிடைநுடக்கத்தான் மின்னுக்கு நேராயிருந்தது; மெல் அடி பூ-மெல்லியவடிகள் பூவேயாயிருந்தன;
கல் இயல் வெம்மைக் கடம் கடுந் தீ-கல்லின் கணுண்டாகிய வெம்மையையுடைய காடு அவ்வடிக்குத் தகாததாய்க்
கடிய தீயாயிருந்தது; எம் அகல் நகர் எல்லை சேய்த்து-அதன்மேல் எம்முடைய வகன்றநகரும் எல்லைசேய்த்தாயிருந்தது;
அதனான் நீ கருதியது பெரிதுமரிது எ-று.
கல்லானியன்ற கடமென வியைப்பினுமமையும்.
எல்லை சேய்த்தென்பன ஒரு சொன்னீர்மைப் பட்டு அகனகரென்னு மெழுவாய்க்கு முடிபாயின. வானரெல்லா
மென்பதூஉம் பாடம் இதுவென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகணிலை
யுணர்த்துதல்.
201
16.9. அழல்தடம் புரையும்
அருஞ்சுர மதுவும்
நிழல்தட மவட்கு நின்னொடேகி
னென்றது.
இதன் பொருள்: பிணையும்
கலையும் - பிணையுங் கலையும் ; பெரு நீர் நசையால்-மிக்க நீர் வேட்கையால்; வன் பேய்த்தேரினை
|