இ
உடன்
போக்கு
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
202
16.10 இறந்துபாடுரைத்தல்
இறந்துபாடுரைத்தல் என்பது ஆதரங்கூறிய
தோழி, நீயுடன் கொண்டு போகாயாகில் அலரானுங் காவன்மிகுதியானும் நின்னையெதிர்ப்படுதலரி- தாகலின்,
தடந்துறந்த கயல்போல இறந்து படுமெனத் தலைமகளதிறந்துபாடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
203. இங்கய லென்னீ பணிக்கின்ற
தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக்
கண்ணுத
லண்ணல் கடிகொள்தில்லைப்
__________________________________________________________
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும்-பெரிய
பேய்த்தேரினைச் சென்றணுகும் முரம்பா னிரம்பிய சுரமும்; ஐய-ஐயனே; நின்னொடு ஏகின் மெய்யே
எம் பைந்தொடிக்கு-நின்னொடு சொல்லின் மெய்யாக எம்பைந்தொடிக்கு; இணையும் அளவும் இல்லா
இறையோன் உறை தில்லைப் பூந்தண் பணையும் தடமும் அன்றே - ஒப்பு மெல்லையு மில்லாத இறையோனுறைகின்ற
தில்லை வரைப்பிற் பூக்களையுடைய குளி்ர்ந்த மருதநிலமும் பொய்கையு மல்லவோ! நீயிவ்வாறு
கூறுவதென்னை எ-று.
முரம்பு - கல் விரவி யுயர்ந்திருக்குநிலம்.
ஏகினென்னும் வினையெச்சம் பணையுந்தடமு மாமென விரியுமாக்கத்தோடு முடிந்தது. அழல்தடம்-தீக்காய்கலம்.
விகாரவகையால் தடா தடமென நின்றது. அழலானிறைந்த பொய்கையெனினுமமையும். அலங்காரம்: புகழாப்புகழ்ச்சி.
202
16.10. கார்த்தடமுங்
கயலும்போன்றீர்
வார்த்தடமுலையு மன்னனுமென்றது.
இதன் பொருள்: இணைப்பது
இல்லாக் கங்கை அம் செஞ்சடைக்
|