New Page 1
உடன்
போக்கு
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
சிறந்த மதிநுதலே.
204
16.12 துணிந்தமைகூறல்
துணிந்தமை கூறல் என்பது உலகியல்
கூறுவாள்போன்று கற்புவழி நிறுத்தி, எம்பெருமான் நின்னை நீரில்லாத வெய்ய சுரத்தே உடன்கொண்டு
போவானாக நினையாநின்றான்; இதற்கு நின்கருத் தென்னோவெனத் தோழி தலைமகளுக்குத் தலைமகனினைவு
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
205. குறப்பாவை நின்குழல் வேங்கையம்
போதொடு கோங்கம்விராய்
நறப்பாடலம்புனை வார்நினை
வார்தம் பிரான்புலியூர்
_____________________________________________________________
என்றாராகலின், வாயிற் சிறந்த
மதியிற் சிறந்த வென்பதற்குத் தாய்போல நாண் சிறத்தலும் நாணினுங் கற்புச்சிறத்தலுமாகிய
இரண்டும் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த நூல்களிடத்துச் சிறப்புடைய பொருளென்றுரைப்பினு மமையும்.
இது குறிப்பெச்சம். போக்குத் துணிய - போக்குத் துணியும் வண்ணம். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை
யுடன்போக்கு நேர்வித்தல்.
204
16.12. பொருளவே லண்ணல்
போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்று
செப்பியது
இதன் பொருள்: குறப்பாவை
- குறப்பாவாய்; தம்பிரான் புலியூர் மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் - தம்பிரானது
புலியூரை மறக்கக்கூடுவதொரு தீவினைவிளைவுவருமாயின்; சென்று சென்று பிறப்பான் அடுப்பினும்-பல
யோனிகளினும் சென்று சென்று பிறக்கக் கூடினும்; பின்னுந் துன்னத்தகும் பெற்றியர்-பின்னுஞ்சென்று
சேரத் தகுந் தன்மையை யுடையவர் நின் குழல் வேங்கைப் போதொடு கோங்கம் விராய்: நின் குழலின்க
ணுண்டாகிய வேங்கைப்பூவொடு கோங்கம் பூவை விரவி - நறப் பாடலம் புனைவார் நினைவார்; தேனையுடைய
பாதிரிமலரைப் புனைவாராக நினையாநின்றார் எ-று.
|