16
உடன்
போக்கு
16.13 துணிவொடு வினாவல்
துணிவொடு வினாவல் என்பது தலைமகனினைவு
கேட்ட தலைமகள் அவனினைவின்படியே துணிந்து நின்று, இந்நீரில்லாத வெய்யசுரத்தே யிப்பொழுதிவர்
நம்மையுடன் கொண்டு போகைக்குக் காரணமென்னோவெனத் தோழியை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள்-
206. நிழற்றலை தீநெறி நீரில்லை
கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப்
போதுகள்
கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல்
லக்குறிப்
பாகும்நங் கொற்றவர்க்கே.
206
_______________________________________________________________
16.13. சிலம்பன் றுணிவொடு செல்சுரம்
நினைந்து
கலம்புனை கொம்பர் கலக்க
முற்றது.
இதன் பொருள்: நிழல்
தலை தீ நெறி நீர் இல்லை - நிழலிடந்தீந்த வழி நீருடைத்தன்று; ஓரிகத்தும் கானகம் அழல்
தலை வெம்பரற்று என்பர்-இருமருங்கு முண்டாகிய ஓரி கூப்பிடுங்காடு அழனுதிபோலு நுதியையுடைய வெய்ய
பரலையுடைத்தென்று சொல்லுவர்; தில்லை அம்பலத்தான் கழல் தலை வைத்துக் கைப் போதுகள் கூப்பக்
கல்லாதவர் போல்-தில்லையம்பலத்தின் கண்ணானது கழல்களைத் தந்தலைமேல்வைத்துக் கையாகிய
போதுகளைக் கூப்பப்பயிலாத வரைப்போல இத்தன்மைத்தாகிய நெறிக்கண்; குழல் தலைச்சொல்லி-குழலிடத்துச்
சொற்போலுஞ் சொல்லையுடையாய்; நம் கொற்றவர்க்குச் செல்லக் குறிப்பு ஆகும். என்னோ-நம்
கொற்றவர்க்குச் செல்லக் குறிப்புண்டாகின்ற இஃதென்னோ! எ-று.
நீரில்லை யென்னுஞ்
சொற்கள் ஒரு சொன்னீரவாய் நெறியென்னுமெழுவாய்க்குப் பயனிலையாயின. நெறிக்கணீரில்லை யெனவிரிப்பினு
மமையும். நிழலிடந் தீயோ டொக்குநெறி; அந்நெறி நீருடைத்தன்று; கானகமெங்கு மோரி கூப்பிடும்;
அக்கானகம் அழற்றலை வெம்பரலை யுமுடைத்து என்றுரைப்பினுமமையும்.
|