பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
390

16

உடன் போக்கு

16.14 போக்கறிவித்தல்

   
போக்கறிவித்தல் என்பது இப்பொழு தவர் போகைக்குக் காரணமென்னோவென்று கேட்ட தலைமகளுக்கு நீங்கள் உடம்பு முயிரும் போல ஒருவரையொருவரின்றியமையீராயினீர்; இத் தன்மைத்தாகிய நுங்காதலையறிந்து வைத்தும் அவற்குவரு மேதம் நினதென்றஞ்சி யானவனை வரவுவிலக்குவேன்; அவனுமவ்வாறு வருதலையொழிந்து வரைவொடுவரிற் பொன் முதலாகிய வெல்லாவற்றையு நினக்கு முலைப்பரிசம் பெறினும் நமர் நின்னைக் கொடார்; சொல்லுமிடத்து இதுவன்றோ நீரருஞ்சுரம் போகைக்குக் காரணமென்று தோழி தலைமகனது போக்கறிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

207. காயமும் ஆவியும் நீங்கள்சிற்
        றம்பல வன்கயிலைச்
    சீயமும் மாவும் வெரீஇவர
        லென்பல் செறிதிரைநீர்த்

_______________________________________________________________

இப்பொருட்குக் கானகமோரிகத்து மென்பதற்கு நெறி நீரில்லை யென்றதற் குரைத்த துரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

206

16.14.  பொருசுடர்வேலவன் போக்குத்துணிந்தமை
      அரிவைக்கவள் அறியவுரைத்தது.


   
இதன் பொருள்: நீங்கள் காயமும் ஆவியும் - நீங்கள் உடம்பு முயிரும்போல ஒருவரையொருவரின்றி யமையாத வன்பை யுடையீர்; சிற்றம்பலவன் கயிலைச் சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல்-இத்தன்மைத்தாகிய நுங்காதலை நினையாது சிற்றம் பலத்தான் கயிலையிற் சீயத்தையும் அல்லாத கொடுவிலங்கையுமஞ்சி யானவனை வரற்பாலையல்லையென்று கூறுவேன்; செறி திரை நீர்த் தேயமும் யாவும் பெறினும் நமர் கொடார் - அவ்வாறு வருதலை யொழிந்து வரைவுவேண்டின், நெருங்கிய திரைகளை யுடைய கடலாற்சூழப்பட்ட இந்நிலத்தையும் பொன்முதலாகிய வெல்லாவற்றையும் பெறினும் நமர் நின்னைக்கொடார்கள்; அதனால் தோயமும் நாடும் இல்லாச் சுரம் போக்குத் துணிவித்த செப்பில், இன்ன - நீரு மக்கள் வாழுமிடமுமில்லாத சுரங்களைப் போதலைத் துணிவித்தன சொல்லுமிடத்து இத்தன்மையனவன்றோ? எ-று.