அம
உடன்
போக்கு
அம்பஞ்சி ஆவம் புகமிக
நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக்
கிற்பதைக்
கும்மலர்ச் சீறடிக்கே.
209
16.17 குறியிடங் கூறல்
குறியிடங் கூறல் என்பது துணிவெடுத்துரைத்த
தோழி, தாழாது இவ்விருட்காலத்துக் கொண்டுபோவாயாக; யானவளைக் கொண்டு வாராநின்றேன்; நீ
முன்புவந்தெதிர்ப்பட்ட அக்குறியிடத்து வந்து நில்லெனத் தலைமகனுக்குக் குறியிடங் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
210. முன்னோன் மணிகண்ட
மொத்தவன்
அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
தோங்கும் எனதுயிரே
__________________________________________________________
சிவநகர் நல் தளிர் - தில்லையினம்
பனது சிவநகரின் நற்றளிரெனக் கூட்டுக.
சிவநகரென்பது ஒரு திருப்பதி. செம்பஞ்சியின்
மிதிக்கிற் பதைக்கும் மலர்ச்சீறடியென்பன ஒருசொன்னீர்மைப்பட்டு நின்றன; இதனை யதிகாரப்
புறனடையாற் கொள்க. அரிசிந்து கண்ணாளது என்னுமாறனுருபு தொகச்சொல்லாத விடத்துத் தொக்கு நின்றதெனினுமமையும்.
அரிசிந்து கண்ணாள் மலர்ச்சீறடியென்று கூட்டுவாரு முளர். தொல்வரை - பெரியவரை. மெய்ப்பாடு:
அது. பயன்: உடன்போக்கு வற்புறுத்தல்.
209
16.17. மன்னிய இருளில்
துன்னிய குறியிற்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண்
டென்றது.
இதன் பொருள்: எனது
உயிரே அன்னாள் அரும் பெறல் ஆவி அன்னாய் - எனதுயிரை யொப்பாளது அரிய பெறுதலையுடைய ஆவியை
யொப்பாய்; அருள் ஆசையினால்-நினதருண்மேலுள்ள வாசையால்; பொன் ஆர் மணி மகிழ்ப் பூ விழ
யாம் விழை பொங்கு இருள் - பொன்போலும் நிறைந்த நல்ல மகிழின்பூவிழ அவை விழுகின்ற வோசையை
நீ செய்யுங்குறியாக வோர்ந்துயாம் விரும்பும்
|