பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
394

அன

உடன் போக்கு

அன்னாள் அரும்பெற லாவியன்
        னாய்அரு ளாசையினாற்
    பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
        யாம்விழை பொங்கிருளே.

210

16.18 அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல்

   
அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல் என்பது தோழி குறியிடை நிறுத்திப் போகாநிற்ப, தலைமகன் அவ்விடத்தே நின்று, அனிச்சப்பூப்போலும் அழகிய வடிகள் அழற்கடம் போது மென்றால் இதற்கென்ன துன்பம் வந்தெய்துங்கொல்லோ வெனத் தலைமகளடியொடு தான் செல்லாநின்ற வழி நினைந்து, தன்னுள்ளம் வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்-

211. பனிச்சந் திரனொடு பாய்புனல்
        சூடும் பரன்புலியூர்
    அனிச்சந் திகழுமஞ் சீறடி
        யாவ அழல்பழுத்த

___________________________________________________________

மிக்கவிருள்: முன்னோன் மணிகண்டம் ஒத்து - இக்காலத்துக் கருமையால் எல்லார்க்கு முன்னாயவன தழகிய மிடற்றையொத்து; அவன் அம்பலம் தம்முடி தாழ்த்து உன்னாதவர் வினைபோல் பரந்து ஓங்கும்-அவன தம்பலத்தைத் தம்முடிகளைத் தாழ்த்து நினையாத வரது தீவினை போலக் கருமையோடு பரந்து மிகும் எ-று.

    ஆவியன்னாய தருளென்றுரைப்பாருமுளர். மணிமகிழ் பூவிழவென்பது பாடமாயிற் பூவிழமென்னுஞ் சொற்கள் ஒருசொன்னீர்மைப்பட்டு மணிமகிழென்னு மெழுவாயை யமைத்தனவாக வுரைக்க. இனித்தாழாதிவ் விருட்காலத்துப் போகவேண்டு மென்றும் இரவுக்குறிக்கண் வரும் அரையிருட்கண் வந்து அக்குறியிடத்து நில்லென்றுங் கூறினாளாம். துன்னியகுறி - நீ முன்பு வந்திவளை யெதிர்ப்பட்ட குறியிடம். மெய்ப்பாடு: அது. பயன்: குறியிட முணர்த்துதல்.

210

16.18. நெறியுறு குழலியோடு நீங்கத் துணிந்த
      உறுசுடர் வேலோ னுள்ளம் வாடியது.


   
இதன் பொருள்: பனிச் சந்திரனொடு பாய் புனல் சூடும்-