பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
396

New Page 1

உடன் போக்கு

    மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
        மனத்தின் வழுத்துநர்போல்
    மொய்வந்த வாவி தெளியுந்
        துயிலுமிம் மூதெயிலே.

212

_____________________________________________________________

கோனது தில்லையை வாழ்த்தாதாருடைய மனம்போல; முழுதும் இருள் தூங்கும் - உலகமுழுதும் இருள்செறியாநின்றது; வழுத்துநர், போல்-அத்தில்லையை வாழ்த்துவாருடைய மனம்போல; மொய் வந்த வாவி தெளியும் - பெருமையுண்டாகிய பொய்கைகள் கலக்க மற்றுத் தெளியா நின்றன; இம் மூதெயில் துயிலும் - இம்முதியவூர் துயிலாநின்றது, அதனால் வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல் - கூர்மையுண்டாகிய வேலையுடைய விளையர் சூழத் தேரின் கண் வரும் வள்ளலே; உள்ளம் தெய்வம் தரும் - நின துள்ளத்துக் கருதியதனைத் தெய்வம் இப்பொழுதே நினக்குத் தரும்; என்றோழியையுங் கொணர்ந்தேன்; காண்பாயாக எ-று.

    வள்ளலென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்ததெனக் கொண்டு, வள்ளலதுள்ளமென்று விரித்துரைப்பினுமமையும். சூழ்வரத் தேர்வரு மென்று பாடமோதி ஊர்காக்குமிளையர் ஊரைச் சூழ்வரும் வரவுமினி யொழியுமென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளைத் தலைமகனுடன் படுத்தல்.

212