16
உடன்
போக்கு
16.20 ஓம்படுத்துரைத்தல்
ஓம்படுத்துரைத்தல் என்பது கொண்டுசென்றுய்த்து
இருவரையும் வலஞ்செய்து நின்று, மறை நிலைதிரியினும் கடன் முழுதும் வற்றினும். இவளிடத்து நின்னரு
டிரியாமற் பாதுகாப்பா யெனத் தோழி தலைமகளைத் தலைமகனுக் கோம்படுத் துரையா நிற்றல். அதற்குச்
செய்யுள்-
213. பறந்திருந் தும்பர்
பதைப்பப்
படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி
யும்முற்றும்
வற்றுமிச் சேணிலத்தே.
213
_____________________________________________________________
16.20. தேம்படு கோதையை
யோம்ப டுத்தது.
இதன் பொருள்: சிலம்பா
- சிலம்பா; இருந்து உம்பர் பதைப்பப் பறந்து படரும் புரம் கரப்ப - இருந்து உம்பரிடை விடாது
நடுங்கப் பறந்து செல்லும் புரங்கள் கெட; சிறந்து எரி ஆடி தென் தில்லை அன்னாள் திறத்து -
பொலிந்து எரியான் விளையாடுமவனது தெற்கின்கணுண்டாகிய தில்லையை யொப்பாளிடத்து; அறம் திருந்து
உன் அருளும் பிறிது ஆயின் - அறந் திருந்துதற்குக் காரணமாகிய உனதருளும் வேறுபடுமாயின்; இச்சேண்
நிலத்து-இவ்வகன்ற நிலத்து; அருமறையின் திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் - அரிய
மறைகளின் முறைமை பிறழக் கடலு மெஞ்சாது வற்றும் எ-று.
அறந்திரிந்தென்பது பாடமாயின்,
அறந்திரிந்தரு மறையின்றி றந்திரிந்தென மாற்றியுரைக்க, அறந்திரிந்தாற்போல நின்னருளும்
பிறிதாயினென வொருசொல் வருவித்துரைப்பினு மமையும். அருமறையு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஓம்படுத்தல்.
213
|