பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
399

16

உடன் போக்கு

16.22 மெல்லக்கொண்டேகல்

   
மெல்லக்கொண்டேகல் என்பது தோழியை விட்டு உடன்கொண்டு போகாநின்ற தலைமகன் நின்னொடு சேறலான் இன்று இக்காடு திருந்தச் செய்யப்பட்டாற்போலக் குளிர்ச்சியை யுடைத்தா யிருந்தது; இனி நின் சீறடி வருந்தாமற் பையச் செல்வாயாக வெனத் தன்னாய வெள்ளத்தோடும் விளையாடுமாறு போலத் தலைமகளை மெல்லக்கொண்டு செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-

215. பேணத் திருத்திய சீறடி
        மெல்லச்செல் பேரரவம்
    பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
    மாணத் திருத்திய வான்பதி
        சேரும் இருமருங்குங்
    காணத் திருத்திய போலும்முன்
        னாமன்னு கானங்களே.

215

_________________________________________________

16.22.  பஞ்சிமெல்லடிப் பணைத்தோளியை
      வெஞ்சுரத்திடை மெலிவகற்றியது.


   
இதன் பொருள்: பேரரவம் பூண - பெரிய வரவங்களைப் பூணும்வண்ணம்; திருத்திய பொங்கு ஒளியோன் புலியூர் புரையும் - அவற்றின் றீத்தொழிலை நீக்கிய பெருகுமொளியையுடையவனது புலியூரையொக்கும்; மாணத் திருத்திய வான்பதி இருமருங்கும் சேரும் -மாட்சிமைப்படக் குற்றங்கடிந்து செய்யப்பட்ட பெரியவூர்கள் நாஞ்செல்லு நெறியி னிருபக்கமு மொன்றோடொன்று சேர்ந் திருக்கும்; முன்னா மன்னு கானங்கள் காணத்திருத்திய போலும் - முன்னுளவாகிய காடுகள் நாஞ்சென்று காணும்வண்ணந் திருந்தச் செய்யப்பட்டனபோலும், அதனால், பேணத் திருத்திய சீறடி - யான் விரும்பும் வண்ணங் கைபுனையப் பட்ட சிறிய வடியையுடையாய்; மெல்லச் செல்-பையச்செல்வாயாக எ-று.

    பேணத்திருத்திய சீறடி யென்பது சினையாகிய தன்பொருட்கேற்ற வடையடுத்து நின்றது. அரவந் திருத்தியவென வியையும். வான்பதி சேருமென்பதற்குப் பதி நெறியைச் சேர்ந்திருக்கு