New Page 1
உடன் போக்கு
பொன்னா ரணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
மாடுசிற் றம்பலமே.
217
16.25 நெறிவிலக்கிக்கூறல்
நெறிவிலக்கிக் கூறல் என்பது அயர்வகற்றிக்கொண்டு
செல்லாநின்ற தலைமகனை, இனிச்செல்லு நெறிக்கண் நன்மக்களில்லை; நீ தனியை; இவள் வாடினாள்;
பொழுதுஞ் சென்றது; ஈண்டுத்தங்கிப் போவாயாகவென, அவ்விடத்துள்ளோர் வழிவிலக்கிக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
218. விடலையுற் றாரில்லை
வெம்முனை
வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல்
வாடினள்
மன்னுசிற் றம்பலவர்க்
____________________________________________________________
செய்யும் பாலைநில மிதனை
யிப்பொழுதே கடந்து; பொன் ஆர் அணி மணி மாளிகைத் தென் புலியூர் - பொன்னிறைந்த வழகையுடைய
மணியால் விளங்கும் மாளிகையையுடைய தென்புலியூர்க்கண்; புகழ்வார் தென்னா என உடையான் நடம்
ஆடு சிற்றம்பலம்-புகழ்ந்துரைப்பார் தென்னனே யென்று புகழ என்னையுடையான் நின்று கூத்தாடுஞ்
சிற்றம்பலத்தை; இன்று சென்று காண்டும்-இன்று சென்று காண்பேம்; இதுவன்றோ நமக்கு வருகின்ற
வின்பம்! எ-று.
தென்புலியூர்ச் சிற்றம்பலமென
வியையும். உடையா ரென்பது பாடமாயின், தென்னனேயென்று புகழவொரு சிறப்புடையாரென்றுரைப்பினுமமையும்.
மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளையயர்வகற்றுதல். அலங்காரம்: கூற்றிடத்திரு பொருட் கண்
வந்த வுயர்ச்சி வேற்றுமை.
217
16.25. சுரத்திடைக் கண்டவர்
சுடர்க்குழை மாதொடு
சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.
இதன் பொருள்: விடலை
- விடலாய்; உற்றார் இல்லை - இனிச் செல்லு நெறிக்கண் நன்மக்களில்லை; வெம்முனை வேடர் -
உள்ளார் வெய்ய முனையிடத்து வேடரே; தமியை - நீதனியை; மென் பூ மடலை
|