New Page 1
உடன் போக்கு
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
போன்றொளிர் நாடகமே.
219
16.27 வழிவிளையாடல்
வழிவிளையாடல் என்பது கண்டவர்
மகிழக் கொண்டு செல்லாநின்றவன், நெறிசெல்வருத்தத்தி னெகிழ்ந்த மேனியையுடைய நின்னைக் கண்டு
கண்கடம்மாற் கொள்ளும் பயன் கொண்டனம்; இனிச் சிறிதிருந்து இக்கடுங்கானகந் தண்ணெனு மளவுஞ்
செவி நிறைய நின்மொழி பருக வருவாயாகவெனத் தலைமகளுடன் விளையாடாநிற்றல். அதற்குச் செய்யுள்-
220. கண்கடம் மாற்பயன்
கொண்டனங்
கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருகஇன்னே
______________________________________________________________
16.27. வன்றழற் கடத்து வடிவே
லண்ணல்
மின்றங் கிடையொடு
விளையா டியது.
இதன் பொருள்: கண்டு - நெறிசெல்
வருத்தத்தி னெகிழ்ந்த மேனியை யாகிய நின்னைக்கண்டு; கண்கள் தம்மால் பயன் கொண்டனம்-கண்களாற்
கொள்ளும் பயன் கொண்டனம்; காரிகை- காரிகை நீர்மையாய்; இனி நின் பண் கட மென்மொழி
ஆரப் பருக இன்னே வருக-இனிச் சிறிதிருந்து நினது பண்ணினது முறைமையை யுடைய மெல்லிய மொழியைச்
செவிநிறையப் பருகுவான் இவ்விடத்து வருவாயாக; விண்கள் தம் நாயகன்-விண்ணுலகங்கடம்முடைய
தலைவன்; தில்லையில் மெல்லியல் பங்கன்-தில்லைக்கணுளனாகிய மெல்லியல் கூற்றையுடையான்; எம்
கோன்-எம்முடைய விறைவன்; தண் கடம்பைத் தடம்போல் கடுங்கானகம் தண்ணென-அவனது குளி்ர்ந்த
கடம்பையிற் பொய்கைபோலக் கடியகானகங் குளிருமளவும் எ-று.
தண்ணென வின்னே வருகவென
வியையும். கடம்பை யென்பது ஒரு திருப்பதி. கடம்பைத் தடம்போற் கடுங் கானகங் குளிரும் வண்ணம்
நின்மொழியைப் பருகவென்று கூட்டினுமமையும். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல்.
220
|