|
New Page 1
உடன் போக்கு
பொய்குன்ற வேதிய ரோதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிடம் ஏந்திழையே.
223
16.31 செவிலிதேடல்
செவிலிதேடல் என்பது இருவரையும்
வழிப்படுத்தி வந்து பிரிவாற்றாதுக- வலாநின்ற தோழியை, எம்பிள்ளை எங்குற்றது? நீ கவலாநின்றாய்;
இதற்குக்காரண மென்னோ வென்று வினாவிச் செவிலி தலைமகளைத் தேடாநி்ற்றல். அதற்குச் செய்யுள்-
224. மயிலெனப் பேர்ந்திள
வல்லியி
னொல்கிமென்
மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
குற்றதென் னெஞ்சகத்தே
______________________________________________________________
திரிந்து நின்றன. பண்ணிவர்
மொழி - பண்போலுமொழி, இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடங் காட்டுதல்.
223
16.31. கவலை யுற்ற காதற்
றோழியைச்
செவிலி யுற்றுத் தெரிந்து
வினாயது.
இதன் பொருள்: மயில்
எனப் பேர்ந்து - மயில்போலப் புடை பெயர்ந்து; இள வல்லியின் ஒல்கி - இளைய கொடிபோல நுடங்கி;
மெல் மான் விழித்து-மெல்லிய மான்போல விழித்து; குயில் எனப் பேசும் எம் குட்டன் எங்குற்றது-குயில்போலச்
சொல்லும் எமது பிள்ளை யாண்டையது; என் நெஞ்சகத்தே பயில் என - என்னெஞ்சின் கண்ணே தனக்குப்
பயிற்சியென்று பலர் சொல்லும் வண்ணம்; பேர்ந்து அறியாதவன் தில்லைப் பல்பூங்குழலாய்-என் னெஞ்சினின்று
நீங்கியறியாதவனது தில்லையிற் பலவாகிய பூக்களையுடைய குழலையுடையாய்; அயில் எனப்பேரும் கண்ணாய்
- வேல் போலப் பிறழுங் கண்ணையுடையாய்; இன்று அயர்கின்றது என்கொலாம் - நீயின்று
வருந்துகின்றதென்னோ? எ-று.
எங்குற்றதென்பது
ஒருசொல். என்னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறியாதவனென் பதற்கு என்னெஞ்சின்கண்ணே நீ பயில
|