|
New Page 1
உடன் போக்கு
கோளரிக் குந்நிக ரன்னா
ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
லாயத்தெம் வாணுதலே.
225
_________________________________________________________________
செய்தல் தில்லைக்க ணெல்லார்க்கு
மெளிதாந் தாளை யுடையவரது இம்மலையிடத்து; தழல் திகழ் வேல் கோள் அரிக்கு-தழல் விளங்கும் வேலையுடைய
கோள்வல்ல அரிமாவிற்கு; நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர்த் தார்-மறுதலை போல்வாரொருவரது நிறத்தையுடைய
மலரானியன்றதாரை; வாள் அரிக் கண்ணி எம் வாள் நுதல்-வாள் போலுஞ் செவ்வரி பரந்த கண்ணையுடையளாகிய
எம்முடைய வாணுதல்; வண்டல் ஆயத்துத் தன்பாவைக்கு மேவிக் கொண்டாள்-வண்டலைச் செய்யு மாயத்தின்
கண்ணே தன்பாவைக்கென்று அமர்ந்துகொண்டாள்; இத்துணையு மறிவேன் எ-று.
ஆளரி ஒருகால் நரசிங்கமாகிய
மாலெனினுமமையும். கோளரிக்கு நிகரன்னாரென்பதற்குக் கோளரிக்கொப்பாகிய அத்தன்மையரெனினுமமையும்.
இக்குன்றின்கண் வண்டலாயத்து மேவிக் கொண்டாளெனவியையும். தாளரிக்குன்றினென்றதனான், இது தெய்வந்தரவந்ததென்றும்,
பாவைக்கென்றதனான் அறியாப் பருவமென்றும், கோளரிக்கு நிகரன்னா- ரென்றதனான் இவட்குத் தக்காரென்றும்,
மேவியென்றதனாற் பயிர்ப்பு நீங்கிற்றென்றும், தாரென்றதனான் மெய்யுற்றதனோடொக்கு மென்றுங்
கூறினாளாம். மெய்ப்பாடு: பெருமிதம் பயன்: உடன்போக்குணர்த்துதல்.
225
|