பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
412

16

உடன் போக்கு

16.33 கற்புநிலைக்கிரங்கல்

   
கற்புநிலைக்கிரங்கல் என்பது தோழி யறத்தொடுநிற்பக் கேட்ட செவிலி இஃதறமாயினும் இவள் பருவத்திற்குத்தகாது; இதுகிடக்க, இனியவளுக்கு நன்மையாவது அவனை வழிபடுவதல்லது பிறிதில்லை யெனக் கற்புநிலைக் கிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

226. வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
        தக்கின்று தக்கன்முத்தீக்
    கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
        பன்மலர் கேழ்கிளர

_______________________________________________________________

16.33.  விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக்
       காடா யுள்ள நீடா யழுங்கியது.


   
இதன் பொருள்: வடுத்தான் வகிர் மலர் கண்ணிக்குத் தக்கின்று- அறமேயாயினும் வடுத்தான் வகிரப்பட்டாற்போலும் மலர்ந்த கண்ணையுடையாட்கு இம்முதுக்குறைவு தகாது; ஆயினும், எம் அனைக்கு இனி ஆவன - எம்மனைக்கு இனி நம்மாற் செய்யத் தகுவன; எடுத்தாற்கு இனியனவே - எடுத்தாற்கினியனவே; வேறில்லை எ-று.

    தக்கன் முத்தீக் கெடுத்தான் - தக்கனது முத்தீயைக் கெடுத்தவன்; கெடல் இல் தொல்லோன் - ஒருஞான்றுங் கேடில்லாத பழையோன்; தில்லைப் பல் மலர் கேழ்கிளர - அவனது தில்லைக்கட் பலவாகியமலர் நிறங்கிளர; மடுத்தான் குடைந்து அன்று அழுங்க - மடுவைத் தான் குடைந்து அன்று கெடப்புக; அழுங்கித் தழீஇமகிழ்வுற்று எடுத்தாற்கு - அது கண்டிரங்கி யணைத்து இவ்வாறுதவி செய்யப்பெறுதலான் மகிழ்ந்தெடுத்தாற்கெனக் கூட்டுக.

   
தில்லைக்கணெடுத்தாற்கெனவியையும். வகிர்மலர் கண்ணியென்புழிச் செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறினார். வகிரென்னு முவமவினை ஒற்றுமை நயத்தால் உவமிக்கப்படும் பொருண்மேலேறிநின்றது. தானென்பதனை அசைநிலையாக்கி வடுவகிர்போலுங் கண்ணென் றுரைப்பாருமுளர். நீடாயழுங்கல் - நெடிதா யழுங்கல், மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த அழுகை. பயன் : தலைமகளது கற்பினைப் பாராட்டி ஆற்றாமை நீங்குதல்.

226