பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
421

உடன் போக்கு

    தீயின தாற்றல் சிரங்கண்
        ணிழந்து திசைதிசைதாம்
    போயின எல்லையெல் லாம்புக்கு
        நாடுவன் பொன்னினையே.

234

16.42 கொடிக்குறிபார்த்தல்

   
கொடிக்குறி பார்த்தல் என்பது செவிலி நாடத்துணியாநிற்ப, அவ்விருவரையு மிப்பொழுதே வரும்வண்ணம் நீ கரைந்தால், நினக்கு உணங்கலை யஞ்சாதிருந் துண்ணலாம்; அதுவன்றித் தெய்வத்திற்கு வைத்த நிணத்தை யுடைய பலியையும் நினக்கே வரைந்து வைப்பேன்; அவ்வாறு கரைவாயாகவென நற்றாய் கொடிக்குறி பாராநிற்றல். அதற்குச் செய்யுள்-

235. பணங்களஞ் சாலும் பருவர
        வார்த்தவன் தில்லையன்ன
    மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
        இன்னே வரக்கரைந்தால்

_______________________________________________________________

    “ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்
     தாமே செல்லுந் தாயருமுளரே”

- தொல். அகத்திணை. 40

என்றாராகலிற் செவிலிதேடப் பெறும். அலங்காரம்: முயற்சி விலக்கு.   234

16.42.  நற்றாய் நயந்து
      சொற்புட் பராயது.


   
இதன் பொருள்மாக் குணங்கள் அஞ்சாற் பொலியும் நல சேட்டைக் குலக்கொடியே-பெரியகுணங்களைந்தான் விளங்கும் நல்ல சேட்டையை- யுடைய சீரியகொடியே; பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன - படங்க ளைந்து ஆடாநிற்கும் பரிய வரவைச் சாத்தியவனது தில்லையைப் போலும்; மணம் கொள் அம் சாயலும் மன்னனும்-நறுநாற்றம் பொருந்திய அழகிய மென்மையை யுடையாளும் மன்னனும் இன்னே வரக் கரைந்தால் -  இப்பொழுதே வரும்வண்ணம் நீயழைத்தால்; உணங்கல் அஞ்சாது உண்ணலாம்-யா மோப்பாமையின் உணங்கலை யஞ்சாதிருந்து நினக்குண்ணலாம்;  ஒண்நிணப் பலி ஓக்குவல்-தெய்வத்திற்குக்