பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
425

New Page 1

உடன் போக்கு

    வேலொத்த வெம்பரற் கானத்தின்
        இன்றொர் விடலைபின்போங்
    காலொத் தனவினை யேன்பெற்ற
        மாணிழை கால்மலரே.

238

16.46 வேட்டமாதரைக் கேட்டல்

   
வேட்டமாதரைக் கேட்டல் என்பது சுவடுகண்டிரங்கா நின்று, அதுவழியாகச் செல்லாநின்றவள், இவ்வாறு அறியாப் பருவத்தளாய்த் தனக்கியைபில்லாத சுரத்தின்கண் அயலானொருவனுடன் போந்தாள்; அவளை நீ கண்டாயோவென வேட்ட மாதரைக் கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்-

239. பேதைப் பருவம் பின்சென்
        றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
    ஊதைக் கலமரும் வல்லியொப்
        பாள்முத்தன் தில்லையன்னாள்

_______________________________________________________________

கொள்ளும்;  வினையேன் பெற்ற மாண் இழை கால்மலர்-தீவினை யேன் பெற்ற மாணிழையுடைய அத்தன்மையவாகிய காலாகிய மலர்கள்;  இன்று வேல் ஒத்த வெம் பரற் கானத்தின் ஓர் விடலைபின் போம் கால் ஒத்தன-இன்று வேலையொத்த வெய்யபரலையுடைய காட்டின்கண் ஒருவிடலை பின் போதற்குத் தகுங்காலை யொத்தன;  இதனையெவ்வாறு ஆற்றவல்லவாயின! எ-று.

    தவிசு - தடுக்குமுதலாயின. கான்மலரென அவற்றை மலராகக் கூறினமையாற் காலொத்தனவென வுவமித்தாள். பிணியாயென்றும், பிணிபோலென்றும், காலொத்திராவென்றும் பாடமோதுவாருமுளர். காலென்றது அடியை.

238

16.46.  மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப்
       பின்வரு செவிலி பெற்றி வினாயது.


   
இதன் பொருள்: போதிற் பொலியும் தொழில் புலிப்பற் குரல் பொற்றொடி - பூவின்கட்பொலியுந் தொழிலினையும் புலிப்பல்லை யுடைய கழுத்தினையுமுடைய பொற்றொடியாய்;  பேதைப் பருவம் சென்றது பின்-பேதையாகிய பருவங்கழிந்தது சுரம் போந்தபின்;  முன்றில் எனைப் பிரிந்தால் ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள்-