பத
உடன் போக்கு
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவொர் பெருந்தகையே.
242
_______________________________________________________________
கட்டங்கம் - கட்டங்கமென்னும்
படைக்கலத்தையும், சூழ்சடை - சூழ்ந்த சடையினையும்; பொத்திய வெண் கோலத்தினீர் - மெய்ம்
முழுதும் மூடிய வெண்கோலத்தையு முடையீர்; புலியூர் அம்பலவர்க்கு உற்ற பத்தியர் போல-புலியூர்க்க
ணுண்டாகிய அம்பலத்தையுடையவர்கண் மிக்க பத்தியையுடையாரைப் போல; பணைத்து இறுமாந்த பயோதரத்து
ஓர் பித்தி-பெருத்திறுமாந்த முலைகளையுடைய ளொருபேதை; தன் பின்வர ஓர் பெருந்தகை முன் வருமோ
- தனக்குப் பின்வர ஒருபெருந்தகை முன்னே வருமோ? உரைமின் எ-று.
சுத்தி - பிறர்க்குத் திருநீறு
கொடுத்தற்கு இப்பிவடிவாகத் தலையோட்டா னமைக்கப்படுவதொன்று. என்பணி யென்புழி இயல்பும், கட்டங்கமென்புழித்
திரிபும் விகாரவகையாற் கொள்க. கடங்கமென்பது மழு. இது கட்டங்கமென நின்றது. வெண்கோலம் -
நீறணிந்த கோலம். பத்தியர்க்குப் பணைத்தல் உள்ளத்து நிகழும் இன்புறவால் மேனிக்கண்வரு
மொளியும், ஒடுங்காமையும். இறுமாத்தல் - தாழாதவுள்ளத்தராய்ச் செம்மாத்தல். முலைக்குப் பணைத்தல்
பெருத்தல்; இறுமாத்தல்-ஏந்துதல். வெண்பத்திய கோலத்தினீரென்ற பாடத்திற்கு வெண்ணீற்றாற்
பத்திபட விட்ட முண்டத்தையுடைய கோலமென்றுரைக்க.
|