16
உடன் போக்கு
16.51 புணர்த்துடன் வருவோரைப்
பொருந்தி வினாவல்
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி
வினாவல் என்பது வேதியரை வினாவி, அதுவழியாகச் செல்லாநின்றவள், நும்மைக் கண்டு, என்னாற்றேடப்படுகின்றார்
மீண்டார்களென்று கருதி மகிழ்ந்தேன்; அதுகிடக்க, இவ்வாறு நும்மோடொத்த வொழுக்கத்தினராய்
முன்னே யிருவரைப் போகக்கண்டீரோவெனப் புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
244. மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
ரேபுலி யூரெனைநின்
_____________________________________________________________
16.51. புணர்ந்துடன்வரும்புரவல
னொருபால்
அணங்கமர்கோதையை யாராய்ந்தது.
இதன் பொருள்: நும்மைக்கண்டு
மீண்டார் என உவந்தேன்-நும்மைக்கண்டு என்னாற் றேடப்படுகின்றார் மீண்டாரென்றுகருதி மகிழ்ந்தேன்; இம்
மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே - இவ்வாறு நும்மோடொத்த மேதகவையுடைத்தாகிய இவ்வொழுக்கத்தையே
பூண்டார் இருவர் முன்னே போயினரோ? உரைமின் எ-று.
புலியூர் எனை நின்று ஆண்டான்
அருவரை ஆளி அன்னானைக் கண்டேன் - புலியூர்க்கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்றாண்டவனது
கிட்டுதற்கரிய மலையில் ஆளியை யொப்பானை யான் கண்டேன்; தூண்டா விளக்கு அனையாய் - தூண்ட வேண்டாத
விளக்கையொப்பாய்; அயல் அன்னை சொல்லியது என்னையோ -அவனதயல் அன்னைசொல்லியதி யாது?
அதனையவட்குச் சொல்லுவாயாக எ-று.
அருவரைக்கட் கண்டேனெனக்
கூட்டினு மமையும். ஆளியன்னா னென்றதனால், நின்மகட்கு வருவதோரிடையூ றில்லையெனக் கூறினானாம்.
தூண்டா விளக்கு: இல்பொருளுவமை. மணிவிளக்கெனினு மமையும். அணங்கமர் கோதையை - தெய்வ நாற்றமமர்ந்த
கோதையை யுடையாளை. ஆராய்ந்தது-வினாயது. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்தவுவகை. பயன்: அது.
244
|