பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
433

New Page 1

உடன் போக்கு

    வேங்கையின் வாயின் வியன்கைம்
        மடுத்துக் கிடந்தலற
    ஆங்கயி லாற்பணி கொண்டது
        திண்டிற லாண்டகையே.

245

16.53 இயைபெடுத்துரைத்தல்

   
இயைபெடுத்துரைத்தல் என்பது வேங்கைபட்டது கண்டு வியந்து, அதுவழியாகச் செல்லாநின்றவள், எதிர்வருவாரை வினாவ, அவர் நீ கூறாநின்றவரைக் குன்றத்திடைக்கண்டோம்;  அவ்விருவருந் தம்முளியைந்து செல்லாநின்றமைகண்டு, எல்லாவற்றையு முடைய ளாகிய தன் காதலியோடு ஒருவடிவாய் விளையாடும் புலியூர னென்றே கருதி, யாங்களெல்லாமொத்து, மிகவும் அவ்வெழிலைத் தொழ நினைந்தோம்;  அந்நன்மை சொல்லலாவ தொன்றன்றென எதிர்வருவார் அவரியைபெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

246. மின்றொத் திடுகழல் நூபுரம்
        வெள்ளைசெம் பட்டுமின்ன
    ஒன்றொத் திடவுடை யாளொடொன்
        றாம்புலி யூரனென்றே

____________________________________________________________

16.53.  சேயிழை யோடு செம்மல் போதர
      ஆயிழை பங்கனென் றயிர்த்தே மென்றது.

   
இதன் பொருள்: அன்னை-அன்னாய்; நீ சொன்ன கொள்கையர் குன்றத்திடைக் கண்டனம் - நீ கூறிய கோட்பாட்டை யுடையாரைக் குன்றத்திடைக் கண்டேம்; மின் தொத்து இடுகழல் நூபுரம் - அவ்விருவரு மியைந்து சேறலின், மின்றிரளுண்டாகாநின்ற அவனது கழலும் அவளது சிலம்பும்;  வெள்ளை செம்பட்டு - அவனது வெண்பட்டும் அவளது செம்பட்டும்; மின்ன - விளங்க; ஒன்று ஒத்திட - ஒருவடிவை யொத்தலான்; உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்று - எல்லாவற்றையு முடையளாகிய தன்காதலியோ டொருவடிவாய் விளையாடும் புலியூரனென்றே கருதி; ஒத்து நன்று எழிலைத் தொழ உற்றனம்-யாங்களெல்லாமொத்துப் பெரிது மவ்வழகைத் தொழ நினைந்தேம்;  என்னது ஓர் நன்மைதான் - அந்நன்மை யெத்தன்மையதோர் நன்மைதான்! அது சொல்லலாவதொன்றன்று எ-று.