நன
உடன் போக்கு
நன்றொத் தெழிலைத் தொழவுற்
றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
நீசொன்ன கொள்கையரே.
246
16.54 மீளவுரைத்தல்
மீளவுரைத்தல் என்பது இயைபெடுத்துரைத்தவர்,
அவ்விருவரும் ஓரிடுக்கணின்றிப்போய்த் தில்லையினெல்லையைச் சென்றணைவர்; இனி நீ செல்வதன்று,
மீள்வதே காரியமெனத் தேடிச் செல்லாநின்ற செவிலியை, மீளக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
247. மீள்வது செல்வதன் றன்னையிவ்
வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
னொடுங்கிளர் கெண்டையன்ன
________________________________________________
என்னதோர் நன்மையென்றதனான்,
அஃதறமாதலுங் கூறப்பட்டதாம். தானென்பது அசைநிலை, கொள்கையரை யென்னு முருபு விகாரவகையாற்
றொக்கது. என்ன நன்மையதா மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு. உவகை. பயன்: செவிலியை யெதிர்வருவார்
ஆற்றுவித்தல்.
246
16.54. கடுங்கடங் கடந்தமை
கைத்தாய்க் குரைத்து
நடுங்கன்மின் மீண்டும்
நடமி னென்றது.
இதன் பொருள்: கிளர்
கெண்டை அன்ன நீள்வது செய்த கண்ணாள்-புடை பெயராநின்ற கெண்டைபோலும் நீடலைச் செய்த கண்ணை-
யுடையாள்; இவ்வெங்கடத்து - வெய்ய விச்சுரத்தின் கண்; அக்கடமாக்கீள்வது செய்த கிழவோனொடும்
- அத்தன்மைத் தாகிய கடமாவைப் பிளத்தலைச் செய்த கிழவோனோடும்; இந்நெடுஞ்சுரம் நீந்தி-இந்நெடியசுரத்தை
நீந்தி அவ்விருவரும் ஓரிடுக்கணின்றிப் போய்; எம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை
அணுகுவர் - எம்மை யாளுதலைச் செய்தவனது தில்லையினெல்லையைச் சென்றணைவர், அதனால், அன்னை-அன்னாய்; மீள்வது
- செயற்பாலது மீள்வதே; செல்வது அன்று - சேறலன்று எ-று.
|