பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
437

தூண

உடன் போக்கு

    தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
        டெற்றப் பழம்விழுந்து
    பாண்டி லெடுத்தபஃறாமரை
        கீழும் பழனங்களே.

249

_________________________________________________________________

தீர்ப்பவன் தில்லையின்வாய்-அவர் நரகத்தழுந்தாமலெடுத்து அவரது தீவினையைத் தீர்ப்பவனது தில்லையின்கண்; தூண்டில் எடுத்தவரால் தெங்கொடு எற்ற - தூண்டிலைவிழுங்கிய வரால் தெங்கொடு மோத;  பழம் விழுந்து - அதன் பழம் விழுந்து;  பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்கள் - கிண்ணம்போலும் பூக்களையுயர்த்திய பலவாகிய தாமரையைக் கிழிக்கும் பழனங்களை;  அவர் போய் அல்குவர் - அவர்சென்று சேர்வர்; இனியோரிடரில்லை எ-று.

    தில்லையின்வாய்ப் பழனங்களெனவியையும். ஆண்டி லெடுத்தவராமிவர் தாமென்று தம்முட்கூறிப் பின் செவிலிக்குக் கூறினாராக வுரைக்க. இவ்வாறு பகராது செவிலிகேட்ப முழுவதூஉந் தம்முட் கூறினாராக வுரைப்பினுமமையும். தூண்டிலானெடுக்கப்பட்டவராலெனினுமமையும். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: செவிலிக்கியல்பு கூறி அவளை மீள்வித்தல். நில்லாவளை (பா.192) தொட்டு இதுகாறும்வரப் பாலைத் திணை கூறியவாறறிக.

249

உடன்போக்கு முற்றிற்று.