பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
439

17

வரைவு முடுக்கம்

17.1 வருத்தமிகுதி கூறி வரைவுகடாதல்

   
வருத்தமிகுதிகூறி வரைவுகடாதல் என்பது அலரறிவுறுத்த தோழி, அலரானுங் காவன்மிகுதியானு நின்னை யெதிர்ப்பட மாட்டாதழுது வருந்தாநின்றவளிடத்து நின்னருளிருக்கின்றவா றென்னோவெனத் தலைமகளது வருத்தமிகுதிகூறித் தலை மகனை வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

250. எழுங்குலை வாழையின் இன்கனி
        தின்றிள மந்தியந்தண்
    செழுங்குலை வாழை நிழலில்
        துயில்சிலம் பாமுனைமேல்

_____________________________________________________________

17.1.  இரவுக் குறியிடத் தேந்திழைப் பாங்கி
     வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.

   
இதன் பொருள்: எழும் குலை வாழையின் இன் கனி தின்று - எழாநின்ற குலைகளை யுடைய வாழைத்திரளின்கணுண்டாகிய இனிய கனிகளைத் தின்று; இள மந்தி - இளைய மந்தி;  செழுங்குலை வாழை அம் தண் நிழலில் துயில் சிலம்பா - வளவிய குலையையுடைய அவ்வாழைத்திரளினது நல்ல குளிர்ந்த நிழற்கண் வெருவுதலின்றித் துஞ்சுஞ் சிலம்பை யுடையாய்; முனைமேல் உழும் கொலை வேல் திருச்சிற்றம்பலவரை உன்னலர் போல் - போரிடத் துழுங் கொலை வேலையுடைய திருச்சிற்றம்பலவரை நினையாதாரைப் போல; அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு - வருந்தாநின்ற உலைத் தொழிலமைந்த வேல்போலுங் கண்ணை யுடையாட்கு; நின் அருள் வகை என்னோ - நினதருட்கூறியாதோ? இவளதாற்றாமைக்கு மருந்தன்று எ-று.

   
நின்னருள்வகை யென்னோவென்பதற்கு இவ்வாறு வருந்துமிவடிறத்து இனி நீ செய்யக்கருதிய வகை யாதோவெனினுமமையும். அழுங்கொலை வேலென்பது பாடமாயின், அழாநின்ற கொலை வேல்போலுங் கண்ணையுடையாட்கென் றுரைக்க, எழுங்குலை - இளங்குலை. செழுங்குலை-முதிர்ந்த குலை. எழுங் குலையு முதிர்ந்த குலையு முடைமையான் இடையறாது பழுக்கும் வாழைத் திரளின்கணுண்டாகிய கனியை நுகர்ந்து, மந்தி வேறொன்றான் வெருவாது அவ்வாழை நிழலின்கீழின்புற்றுத் துயிலுமாறுபோல, ஆராவின்ப மிடையிட்டு நுகராது நீ வரைந்து கோடலான் இடையறாத