பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
448

வரைவு முடுக்கம்

மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
        யாளையும் மேனிவைத்தான்
    வான்றோய் மதில்தில்லை மாநகர்
        போலும் வரிவளையே.

257

_____________________________________________________________

வைத்து-நீண்ட திருமுடிக்கண் மீனைப்பொருந்திய புனலாகிய பெண்ணை வைத்து; உடையாளையும் மேனி வைத்தான் வான் தோய் மதில் தில்லை மாநகர் போலும் வரிவளை-எல்லாவற்றையு முடையவளையுந் திருமேனிக்கண் வைத்தவனது வானைத்தோயு மதிலையுடைய தில்லையாகிய பெரியநகரை யொக்கும் வரிவளை; வான் தோய் பொழில் எழில் மாங்கனி-வானைத் தோயும் பொழிலின் கணுண்டாகிய நல்லமாங்கனியை; கடுவன் தேன் தோய்த்து மந்தியின் வாய் அருத்தி மகிழ்வ கண்டாள்-கடுவன் தேனின் கட்டோய்த்து மந்தியின்வாய்க் கொடுத்து நுகர்வித்துத் தம்மு ளின்புறுமவற்றைக் கண்டாள் எ-று.

   
என்றதனால், துணைபுறங் காக்குங் கடுவனைக்கண்டு, விலங்குகளுமிவ்வாறு செய்யாநின்றன; இது நங்காதலர்க்கு நம் மாட்டரிதாயிற்றென நீ வரையாமையை நினைந்தாற்றாளாயினாளென்றாளாம். அருத்தி என்பதற்கு நெடுஞ் சுரநீந்தி (தி.8 கோவை பா. 247) என்றதற் குரைத்ததுரைக்க. கான்றோய் பொழிலென்பதூஉம் பாடம். வரிவளையை வரைவு-வரிவளையை வரைதல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: வரைவுகடாதல்.

257