புலர
வரைவு முடுக்கம்
புலராஇரவும் பொழியா
மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந்
தும்மில்லை
யோநும் வரையிடத்தே.
259
17.11 இரவுடம்பட்டாள்போன்று
பகல்வரவு விலக்கல்
இரவுடம் பட்டாள்போன்று பகல்வரவு
விலக்கல் என்பது இவள் மருந்தில்லையோவென்றது, யான் இரவுக்குறிச்செல்லின் மழைக்காலிருளா- னெதிர்ப்படலருமையான்
வேட்கை யுற்றுப் பகற்குறி யுடம்பட்டாளென வுட்கொண்டு, பகற்குறிச் செல்லா நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு,
பகல்வந்தருளாநின்றது அவளுக்கு வருத்தமுறும் படியாக மிக்க வலராகாநின்றது; அதனாற் பகற்குறி வரற்பாலை
யல்லையென, இரவுக்குறி யுடம்பட்டாள் போன்று பகற்குறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
260. இறவரை உம்பர்க்
கடவுட்
பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
நாட கொழும்பவள
________________________________________________
தில்லையோவென ஓருலக வழக்காகவுரைப்பினுமமையும்.
வருத்துதலேயன்றித் தணித்தலு முண்டோவென்பதுபட நின்றமையின், மருந்து மென்னுமும்மை; எச்சவும்மை.
இரவின்கண் வந்தொழுகா நிற்பவும், இரவுறு துயரந் தீர்க்கு மருந்தில்லையோ வென்று கூறினமையான்,
வரைவல்லது இவ்வாறொழுகுதல் அதற்கு மருந்தன்றென்று கூறினாளாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்:
இரவுக்குறி விலக்குதல்.
17.11. இகலடு வேலோய்
பகல்வர லென்றது.
இதன் பொருள்: இற
- தொடர்ந்து பெய்யாதிறுதலான்; எழிலி உன்னி-எழிலிபெய்தலை நினைந்து; வரை உம்பர்க் கடவுள்
பராய் - மலைமேலுறையுந் தெய்வங்களைப் பராவி; குறவர் நின்று ஆர்க்கும் குளிர் வரை நாட - குறவர்
நின்றார்ப்பரவஞ்செய்யுங் குளிர்ந்த வரைமே லுண்டாகிய நாட்டை யுடையாய்; கொழும் பவள நிறவரை
மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் உற - கொழுவிய
|