ந
வரைவு முடுக்கம்
நிறவரை மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல
ராம்பக லுன்னருளே.
260
______________________________________________________________
பவளமாகிய நிறத்தையுடைய வரை
போலுந் திருமேனியை யுடையவனது சிற்றம்பலத்தை நினையாதவரைப்போல வருந்த; அரை மேகலையாட்குப்
பகல் உன் அருள் அலராம் - அரைக்கணிந்த மேகலையையுடையாட்குப் பகலுண்டாமுனதருள் மிக்க வலராகா
நின்றது; அதனானீவாரல் எ-று.
குறவரையென்புழி, ஐகாரம்; அசைநிலை.
அசைநிலை யென்னாது குறமலையென் றுரைப்பாரு முளர். வரையையுடைய நாடெனினு மமையும். குறவர் பரவும்
பருவத்துத் தெய்வத்தைப் பரவாது, பின் மழை மறுத்தலா னிடர்ப்பட்டு அதனை முயல்கின்றாற் போல,
நீயும் வரையுங்காலத்து வரையாது, இவளை யெய்துதற்கரிதாகியவிடத்துத் துன்புற்று வரைய முயல்வையென
உள்ளுறை காண்க.
“உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே”
(தொல். அகத்திணையியல்-50) என்பவாகலிற்
றெய்வத்தை நீக்கி யுவமைகொள்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறி விலக்குதல்.
260
|