17
வரைவு முடுக்கம்
17.13 காலங்கூறி வரைவுகடாதல்
காலங்கூறி வரைவுகடாதல் என்பது
இருபொழுதும் வரவு விலக்கின தோழி, மதி நிரம்பாநின்றது; வேங்கை பூவாநின்றன; இனி நினக்கு
வரைவொடு வருதற்குக் காலமிதுவெனக் காலங்கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
262. மையார் கதலி வனத்து
வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத்
தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
மாலையின் முன்னினவே.
262
_____________________________________________________________
17.13. முந்திய பொருளைச் சிந்தையில்
வைத்து
வரைதரு கிளவியில் தெரிய
வுரைத்தது.
இதன் பொருள்: மை ஆர்
கதலி வனத்து வருக்கைப் பழம் விழுதேன்-இருளார்ந்த வாழைக்காட்டின்கண் வருக்கைப்பலாவின் பழம்விழுதலா
னுண்டாகியதேனை; இள மந்திகள் எய்யாது அயின்று சோரும் இருஞ் சிலம்பா-இளையமந்திகளறியாதே யுண்டு
பின் களியாற் சோரும் பெரிய சிலம்பையுடையாய்; மதி ஊர்கொள் - மதி நிரம்பாநின்றது; அம்பலத்தான்
வெற்பின் - அம்பலத்தானுடைய இவ்வெற்பின்கண்; மொய் ஆர் வளர் இளவேங்கை பொன் மாலையின்
முன்னின - செறிவார்ந்த வளராநின்ற விளைய வேங்கைகள் பூத்துப் பொன்மாலைபோலத் தோன்றின;
மெய்யா அரியது என்-இனி மெய்யாக வுனக்கரிய தியாது! எ-று.
கதலிவனத்துண்டாகிய தேனென்றதனாற்
கதலிக்கனியொடு கூடுதல் பெற்றாம். ஊர்கோடல்-குறைவின்றி மண்டலமாக வொளிபரத்தல். அல்லதூஉம்
பரிவேடித்தலெனினுமமையும். நின்மலைக்கண் விலங்குகளு மித்தன்மைத்தாகிய தேனைக் குறியாதுண்டு இன்புறாநின்றனவாகலிற்
குறித்தவற்றினினக்கரிய தியாது இதுவன்றோ பருவமுமென வரைவு பயப்பக் கூறியவாறாயிற்று. மந்திகடேருமென்பது
பாடமாயின், தேனை யறியாதுண்டு அதன் சுவை மிகுதியாற் பின்னதனைத் தேர்ந்துணரு
|